Kamera
>> Sunday 18 January 2015
குறும்பட திறனாய்வு
( Award Winning Best Indian Short Film – Cannes)
Kamera2011ஆம் ஆண்டு Nijo Jonson இனால் இயக்கப்ட்டு இந்தி மொழியில் வெளியாகி ஏராளமான விருதுகளை வென்ற குறும்படம். மிக எளிமையான
கதைபிணைப்புக் கொண்ட குறும்படம்.
சேரி புறத்தில் தாயுடன் தனியாக வாழும்
அர்ஜுன் என்ற பன்னிரெண்டு வயது சிறுவனின் மெல்லிய கதை. சேரி புறத்தில் பழைய பொருட்களை நண்பனுடன் தேடும்போது camera ஒன்று தட்டுப்படுகின்றது. அதை வைத்து என்ன
செய்யலாம் என்று நண்பனிடம் கேட்கும் போது cameraவை யாரை நோக்கி புகைப்படம் எடுக்கும் நோக்குடன் சுட்டுகின்றாயோ அவர்கள் முகத்தில்
புன்னகை அரும்பும் என்று சொல்கின்றான். அதை பரீசிலித்து பார்க்கும் அர்ஜுன் அவை
உண்மையென்று கண்டுகொண்டு இதை வைத்து மக்களிடையே புன்னகையை உற்பத்தி செய்ய
கிளம்புகின்றான். வீட்டில் அவனின் அம்மா பழைய பொருட்களை விற்க்கும் போது cameraவையும் விற்றுவிடுகின்றாள். அதற்கு பிற்பாடு எப்படி
அவன் மக்களிடையே புன்னகையை உருவாகின்றான் என்பதோடு படம் முடிகின்றது.
ஸ்பரிசமான கதையை எடுத்து மிகச்சிதமாக
நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தின் இயல்புகள் அதன்
பின்புலங்கள் கச்சிதமாக காட்சிகளாக படிமப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாவுக்கு
தெரியாமல் ஒழித்து எலி வளர்கின்றான். ரோட்டோர பையன்களுடன் சேர்ந்து டிராபிக்கில்
நிற்கும் வாகனங்களுக்கிடையே வித்தைகாட்டி வாகனங்களுக்கு உள்ளே இருபவர்களிடையே புன்னகையை உருவாக்குகின்றான். உருவாக்கிய
புன்னகையில் திருப்தி காண்கின்றான். இவை திரைகதையில் அட்டகாசமாக
குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனின் தாயின் கதாபாத்திரம் விரக்தி நிலையில் உள்ள கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது, இறுதியில்அவன் தன் தாயிடம்
இருந்து புன்னகை ஒன்றை பெற்றுக்கொள்கின்றான். எந்த முசடான அழுத்தத்துடன் கஷ்டத்துடன்
சேரிபுறத்தில் வாழும் கதாபாத்திரமாக இருந்தாலும் cameraவை சுட்டிநோக்கி புகைப்படம்
எடுக்கும்போது புன்னகைகின்றார்கள்,சிறிய மகிழ்ச்சியை வடிவமைக்கின்றார்கள் அதுதான்
படத்தின் மையக்கரு. அட்டகாசமான பாத்திர அமைப்புகள்.
திரைக்கதையையின் நுணுக்கங்கள் சிலிர்க்கவைக்கின்றன.
இந்தியர்களுடன் பாடல்கள் மிகநெருக்கமானது. பழைய பொருட்களை வேண்ட வரும் கதாபாத்திரம் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு வருகின்றது.
அதேபோல் குளித்துவிட்டு குளியல்அறையில் இருந்து வரும் அர்ஜுன் பாடல் ஒன்றை மெலிதாக
பாடியவாறு வருவான். இப்படி நுணுக்கமா விடயங்கள் திரைக்கதையில் இருக்கின்றன. சிறுவர்களுக்கிடையேயான பண்புகள் எப்படி
இருக்கவேண்டுமோ அதையும் சொல்ல தவறவில்லை. அங்கே பாரேன்று சொல்லிவிட்டு கண்ணில்
தேசிக்காய் புளியை விடுவதாகட்டும், நண்பர்கள் விடைபெறும்போது தாக்கிவிட்டு ஓடுவதாகட்டும் என்று சிறுவர்களுக்கான இயல்பானதன்மைகளை படிமப்படுத்தவும் தவறவில்லை.
ஒளிப்பதிவு இயல்பாக அட்டகாசமாக இருக்கிறது. சில
இடங்களில் cameraவின் பார்வையில் காட்சிகள் நகர்த்தபடுகின்றது அப்போது cameraவின்
பார்வையில் எப்படி காட்சிகள் இருக்குமோ அப்டியே யாதார்த விரோதமின்றி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மெல்லிய கைநடுக்கங்கள் எல்லாம் கவனத்தில்
கொள்ளப்பட்டுள்ளன. பின்னனி இசை அமர்களம் அதிகம் ஒலிக்காமல் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் ஒலித்து
அட்டகாசம் செய்கின்றது. இறுதிக் காட்சியில் வரும் பின்னனியிசைய கவனியுங்கள்.
0 கருத்துக்கள்:
Post a Comment