லூசி (2014) - ஒரு பார்வை

>> Thursday 26 February 2015

நார்மலாக மனிதனின் மூளையில் பத்து வீதம்தான் இயங்குகின்றது மீதி தொண்ணூறு வீதம் இயங்காமல் அப்படியேதான் சமர்த்தாக இருக்கிறது. அந்த பத்துவீதத்தில்தான் நாம் சிந்திகின்றோம் புதிய கண்டுபிப்புக்களை உற்பத்திசெய்கின்றோம், அதி சிக்கலான பிரபஞ்ச இரகசியங்களை ஆராய்கின்றோம்.

நவராத்திரி தினத்தில் கொலுவைத்தல் என்ற விஷயம் இந்துக்களுக்கும் அதை சார்ந்தவர்களும் தெரியும். ஒன்பது படிகளில் கொலு பொம்மைகள் வைக்கப்படும். புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகின்றோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரியில் ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கப்படுகிறதென்று இந்துசமயம் சொல்கின்றது.

முதல் படியில் ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவரகள் இருக்கும். இரண்டாம் படியில் இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.மூன்றாம் படியில் மூவறிவான கறையான், எறும்பு போன்ற பொம்மைகள்.நான்காவது படியில் நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்கப்படும்.ஐந்தாம் படியில் ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள். ஆறம் படியில் ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள். ஏழாம் படியில்சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.எட்டாம் படியில் தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்களின் பொம்மைகள்.ஒன்பதாம் படியில் விநாயகர் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்கள்.
இந்த வரிசையை ஏன் சொல்கின்றேன் என்றால் ஆறறிவான மனிதன் வரும் ஆறாம் படியில்தான் பத்துவீத கணக்கு வருகின்றது. பத்து வீதத்திலும் அதிகமான மூளை இயக்கத்தை கொண்டவர்கள் மகாரிஷிகள் அதைவிட அதிகமான மூளை இயக்கத்தை கொண்டவர்கள் தேவர்கள். அதையும் தாண்டி நூறுவீதம் மூளையை இயக்கமாக கொண்டவர்கள் கடவுள் அவ்வளவுதான். இப்போ நமக்கு கொடுக்கப்பட்ட இந்த முளையிலிருந்து நாம் பத்துவீதத்தை தாண்டி செயல்படும் திறனை பெற்றால் என்னவாகும்? மேல் சொன்ன விடயங்களிலிருந்து உங்களுக்கே புரிந்திருக்கும். அந்தக் கேள்வியின் விடைதான் லூசி திரைபடத்தின் தேடல்.

தாய்வானில் மேல்படிப்பு படிக்கும் மாணவி லூசி. ஜாலியாக அவள் வாழ்கை சென்று கொண்டிருக்கின்றது. அவளுக்கு வேண்டப்பட்ட நெருக்கமான நண்பன் ஒரு சூட்கேஸை ஜாங் என்பவனிடம் கொடுத்துவர சொல்கிறான்.லூசி மறுக்கிறாள். அவன் அந்தப் சூட்கேசை அவளது கையில்விலங்கிட்டுவிடுகிறான். சாவி உள்ளே ஜாங்கிடம் இருக்கும் என்கின்றான். பெட்டியை விடுவிக்க முடியாது வேறுவழியின்றி ஜாங்கை பார்க்க போகின்றாள். அதுவொரு ஐந்து நட்;சத்திர விடுதி வரவேற்பில் ஜாங்கை பார்க்க வந்திருப்பதாக சொல்கிறாள். அப்போது அந்த சீரியஸான மாறுதலை கவனிகின்றாள். துப்பாக்கி சத்தம் வெளியில் நின்றுகொண்டிருந்த நண்பன் சுடப்பட்டு இறகின்றான். நிலைமையை சுதாகரிக்க முதல் ஆறுபேர் லூசியை தூக்கிக் கொண்டுபோய் ஜாங் தங்கியிருக்கும் அறையில் விடுகிறார்கள். 
அங்கேயிருக்கும் கொடூரங்களை பார்த்து லூசி தவிக்கின்றாள். கொடுரமான சில கொலைகளும் கையில் இரத்தமுமாக ஜாங் அறிமுகமாகின்றான். ஜாங் மிகக் கொடூரமான மாபிய தலைவன். அவனுக்கும் இவளுக்கும் மொழிபிரச்சனை, தொலைபேசியில் ஜாங்கின் ட்ரான்ஸ்லேட்டரை பிடித்துக்கொடுக்க ஒருமாதிரி உரையாடுகின்றாள். சூட்கேஸ்குள் உண்மையில் என்ன இருக்கிறது ஜாங்காலும் உறுதிபடுத்த முடியவில்லை. உள்ளே எதுவும் சக்திவாய்ந்த பாம் இருக்கா என்றுவேற சந்தேகம். லூசியை திறக்க சொல்லிவிட்டு ஜாங்கும் மறவர்களும் பாதுகாப்பாக ஒதுங்குகின்றார்கள். பயத்துடன் பரிதவிப்புடன் நடுக்கம் கலந்து திறக்கின்றாள். உள்ளே அதி சக்தி வாய்ந்த போதை பொருளான மூளையின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் ரசாயன பவுடர் CPH4இருக்கிறது.உனக்கு ஒரு வேலை தருகின்றேன் செய்யென்று சொல்கிறான் ஜாங் வேலையும் வேண்டாம் ஒன்றும்வேண்டாம் தன்னை விடச் சொல்கின்றாள் லூசி.

லூசி ஒரு அறையின் உள்ளே மயக்கத்தில் இருந்து எழுகிறாள். அடிவயிற்றில் பாண்டேஜ் செய்யப்பட்டுள்ளது ரத்தம் கசித்துள்ளது.போதை மருந்து பை ஒன்றை அவளின் வயிற்றின் உள்ளே வைத்து தைத்துள்ளார்கள் அப்படியே எயார்போட் மூலமாக அனுப்பி லாவகமாக கடத்தபோகின்றார்கள். அவளுடன் சேர்த்து மேலும் முன்று பேரை முகத்தை மூடி இழுத்து செல்கிறார்கள். அவர்கள் ஓவ்வருவர்களின் வயிற்றிலும் போதைபொருளை வைத்து தைத்துளார்கள். 
லூசி ஒருவளே பெண் மற்றவர்கள் ஆண்கள். அடைத்து வைத்துள்ள அறையில் ஒருத்தன் லூசிமேல் அந்த எண்ணத்தில் கைவைக்க அதை லூசி தடுக்க கடுப்பாகி லூசியின் வயிற்றில் உதைக்கிறான். மற்றைய அடியாள் அவனை வெளியில் அவசரமாக அவனை இழுத்துக்கொண்டு போய்விட அறையில் தனியே லூசி. லூசியின் வயிற்றுக்குள் இருக்கும் பை உடைந்து லீக்காகி அந்த போதை மருந்துஉடலில் கலக்கிறது. அதிக அவஸ்தையில் துடிக்கும் லூசி தீடீரென்று அமைதியாகின்றாள். இருபது வீதத்திற்க்கு அவளின் மூளை இயங்க தொடங்குகின்றது. அங்கேயிருந்து லூசியின் அக்ஷன் சரவெடிகள் ஆரம்பிக்கின்றன. அங்கே இருந்து தப்பிக்கின்றாள். விடாமல் துரத்துகிறது ஜாங்கின் கடத்தல் மாபிய கும்பல்.
மெல்ல மெல்ல அவளது மூளைத்திறன் கூடிக்கொண்டே போகிறது.இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு ஒவ்வொருவரையும் தன் மூளையால் கட்டுப்படுத்தும் இயல்பு வருகின்றது. இந்த துறையில் ஆராச்சி செய்யும் புரொபசர் நார்மனிடம் சென்று தன்னுடைய பிரச்சினைக்கு தீர்வு காண செல்கிறாள். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் உபயோகதிறன் கூடுகிறது. புதிதாக சக்தி வருகின்றது. மிச்ச பைகளை வயிற்றில் வைத்து கடத்தும் மற்றை நபர்களை அட்காசமாக தனது சக்திகளால் ஒரு போலிஸ் ஆபிசருடன் இணைந்து தடுக்கின்றாள். தடுத்துவிட்டு மிச்ச CPH4 வையும் தானே உள்ளேடுகின்றாள். கடுப்பாகிய ஜாங்கின் கும்பல் தேடிவந்து லூசியுடன் அனாவசியமாக வேண்டிக்கட்டி கொள்கின்றார்கள். இறுதியில் அவள் மூளை நூறு சதவீதத்தை படிப்படியாக அதிகரிக்க ஓவ்வரு கட்டத்திலும் உயிர்களின் பரிமாண வளர்சிகளின் இரகசியங்களை அறிகின்றாள். நூறு வீதத்தை முழுமையாக அடைய அனைத்து பிரபஞ்ச உருவாக்கங்களையும் அதன் மர்மங்களையும் அடைகின்றாள். அனைத்தையும் அடைய சிம்பிள் முதலே சொன்னதுபோல் கடவுளாகின்றாள் லூசி. நூறு வீதம் அவளின் மூளை இயங்குகின்றது. பிரபஞ்சத்துடன் கரைந்து விடுகின்றாள்.

படத்தில் லூசியாக வருவது ஸ்கார்லட் ஜோஹான்சன். இவரை பற்றி தெரியாத ஹாலிவூட் ரசிகர்கள் இருக்க முடியாது அக்ஷன் மங்கை, இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார். ஜாங்காக நடித்தவர் தென்கொரிய நடிகர் அவரின் அமைதியான அலச்சிய மிரட்டல் நடிப்பு அட்டகாசமாக கட்டிப் போடுகின்றது. ‘தி லேடி , தி ஃபிஃப்த் எலிமெண்ட் , ஏஞ்சல் - போன்ற பெண்கதாபாத்திரங்களை மையமாக கொண்ட படங்களை இயக்கிய லூக் பெஸ்ஸன் தான் இந்தப்டத்தையும் அட்டகாசமாக இயக்கியுள்ளார். வசனங்களும் அக்ஷன் காட்சிகளும் பிரமாண்டமாக ரசிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவும் கிராபிக்ஸ் வேலைகளும் பிரம்மிக்கவைக்கின்றன. சயின்ஸ் ஃபிக்ஷன் பிளஸ் திரில்லர் திரைப்படம். எடுத்துக்கொண்ட மையக்கரு அட்டகாசம். கண்டிப்பாக இந்த படத்தை சுவாரசியத்துக்கு பார்கலாம். இந்த படத்தை பார்த்த எத்தனை பேருக்கு கொலுபொம்மை வைக்கும் நிகழ்வு ஞாபகம் வந்ததோ தெரியவில்லை. படம் கொஞ்சம் லேட்டாகவே பார்க்க முடிந்தது. ரொம்ப நாளாக எழுதநினைத்த பதிவு இப்போது கீபோர்டில் விரல் நடனமாடி விட்டேன். கண்டிப்பாக ஒரு தபா பார்க்கலாம்.

Read more...

இடா - 2013 (போலீஷ்) - உலகசினிமா

>> Tuesday 24 February 2015

மிகவும் இளம்வயது பெண் கன்னியாஸ்திரி உடையில் ஜேசுவினுடைய சிலை ஒன்றுக்கு வர்ணம் தீட்டிக்கொண்டிருக்கிறாள். அதுவொரு கன்னியர் மடம். 1950-60 களில் நடைபெறும் காலம். கடும் ஸ்நோ வெளியில் துவிக்கின்றது. கன்னியர் மடத்தில் பயிலும் அந்தப்பெண் உட்பட மூன்று பெண்கள் ஜேசுவினுடைய சிலையை சுமந்துகொண்டு வெளியில் நிறுத்துகின்றார்கள் ஜெபிக்கின்றார்கள்.

கன்னியாஸ்திரியாவதற்கு தங்களை அர்பணிக்கும் இறுதி சந்தர்பத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். மெல்ல மெல்ல ஆன்மிகத்துக்கு முழுவதுமாக தங்களை அர்பணித்த அந்த பெண்களின் குடும்பத்தினர்களுடன் அர்ப்பணிப்பு நிகழ்வுக்கு முன் சென்று தங்கிவர அனுமதிக்கப் படுகின்றனர். அன்னா என்ற பெண்ணை பார்க்க அவளின் குடும்பத்தினர் எவரும் இல்லை, இருப்பது ஒரேயொரு அத்தை. அத்தைக்கு பலமுறை லெட்டர் அனுப்பியும் பதில் இல்லை, இறுதியாக தன்னால் வந்து கூட்டிச் செல்ல முடியாது என்று பதில் போடுகின்றாள். அன்னாவை அத்தையுடன் தங்கி இருந்துவிட்டுவர அனுப்பிவைக்கப்படுகின்றாள். கட்யாயம் போயாகிவிட வேண்டுமா என்ற கேள்வியுடன் பயணிக்கின்றாள்.

அழகான போலாந்து தேசந்தின் நகரப்பகுதியை சிறுமிக்குறிய ஆச்சரியம் கலந்த மாறும் முகபாவைகளுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகின்றாள். கையில் சிகரட்டுடன் அத்தை அறிமுகமாகின்றாள். அன்னா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றாள். உரையாடல் விரிகின்றது. “உன்னை என்னுடன் அழைத்து வைத்திருந்தால் நீ மகிழ்ச்சியாயிருக்க மாட்டாய்” என்கின்றாள். அன்னாக்கு அந்த மாறுதல் புரிகின்றது ஒரு ஆடவன் அத்தையின் படுகையரயிலிருந்து செல்கின்றான். அன்னாவை பற்றிய உண்மைகளை அத்தை பாசாங்கு இல்லாமல் சொல்லத் தொடங்குகின்றாள்.

“நீ ஒரு யூதர் இனத்தை சேர்ந்தவள் உன் நிஜப்பெயர் இடா லேபிஸ்டியன்..” முதல் முறையாக தன்னுடைய மறைக்கப்பட்ட உண்மைகளை கேட்டு அன்னாவின் முகம் மெலிதாக சலமற்று மாறுகின்றது.இடாவின் பெற்றோர்களின் புகைப்படங்களை அவளின் குழந்தைப்பருவ புகைப்படங்களை காட்டி அவர்களின் குடும்ப வரலாறுளை சொல்கின்றாள். இடா தன் பெற்றோர்களின் கல்லறையை பார்க்க செல்லவதாக கூறுகின்றாள். யூதர்கள் இரண்டாம் உலகயுத்தத்தின்போது கொத்துக் கொத்தாக தேடித்தேடி சிதைத்து கொல்லப்பட்டார்கள், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, அவர்களுக்கு கல்லறை என்று துவும் இல்லை. கால்வாய்களிலும் வீதியோரங்களிலும் புதைப்படார்கள் இடாவின் பெற்றோர்களுக்கு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. இடா தனது பெற்றேர் புதைபட்ட இடத்தை விசாரித்து கண்டுபிடிக்கப்போவதாக கூறுகின்றாள். அத்தையும் கூடவே வருவதாக சொல்கின்றாள்.தேடல் விரிகின்றது, இருவரும் காரில் பயனிகின்றார்கள் பிஸாகிக்கு.

இடாவின் அத்தை பயம் அற்ற துணிச்சலும் செயல்திறனும் மிகவர், ஜாட்ஜ்சாக வேலைபார்ப்பவர், இடாவை தத்து எடுத்து வளத்தவர். இடா அதிக கட்டுக்கோப்புகளுடன் சிறுவயதிலிருந்து கன்னியர் மடத்தில் பயின்று உணர்சிககளை கட்டுபடுத்தும்,தடுமாறா இயல்பை கொண்டவர். “நீ அழகாய் இருகின்றாய் யாரையும் காதலித்து இல்லையா?” என்கிற கேள்வியை இடா அத்தையிடமிருந்து எதிர்கொள்ளும்போது வெட்கம் கலந்த புன்னகையுடன் மறுக்கின்றாள். அர்ப்பணிப்பு நிகழ்வுக்கு முன் அப்படி ஏதுவும் அனுபவத்தை பெறாமல் உன்னை தியாகியாற்பது எப்படி தியாகமாகும் என்கின்றாள் அத்தை. இடாவின் பெற்றோர்கள் தங்கியிருந்த பழைய வீட்டிக்கு சென்று விசாரிக்கின்றார்கள். அந்த வீட்டில் இப்போது வேறுயாரோ இருகின்றார்கள். பரிதவிப்போடு வீட்டை சுற்றி பார்க்கின்றாள் இடா.

அலைக்கழிப்பு தொடர்கின்றது. அத்தையின் வாழ்க்கை முறை இடாவுக்கு எரிச்சலையும் சிலசமயம் கிளப்புகின்றது இறுதியில் அது அவளை கவரவும் செய்கின்றது. அதிகம் சிகிரட், அடிக்கடி கிளப்பில் மது அருந்துவது, தனிமை என்று நீள்கின்றது அத்தையின் வாழ்க்கை.தேடலின் நடுவே இசைக்குழுவில் ஒகஸ்ரா வாசிக்கும் இளைஞன் ஒருவன் அறிமுகமாகின்றான், முதல் பார்வையிலே இடாவுக்கு அவனை பிடித்துவிடுகின்றது. மெலிதான காதலும் போகப்போக அரும்புகின்றது. அந்த காதல் சொல்லப்படும் காட்சிக்கோர்புகள் உன்தமாக அழகியலாக படிமமாகப்பட்டுள்ளது. இடாவின் பெற்றோர்கள் உயிர்தப்பி ஒடி பிஸாகி கிராமத்தில் ஒளிந்துகொண்டிருந்தார்கள், பின்பு அங்கே காட்டிக் கொடுக்கபட்டு கொல்லப்பட்டார்கள். எப்படி யாரால் கொல்;லப்பட்டார்கள் என்பதை கண்டறிகின்றார்கள். அந்த உளைச்சல் இடாவைவிட அத்தையே அதிகம் பாதிக்கின்றது. இடா அதிர்சிகளனைத்தையும் இயல்பாக தாங்கிக்கொள்கின்றாள். இடாவின் பெற்றோர்கள் புதைக்கப்பட்ட இடத்தை இறுதியில் கண்டறிந்து எஞ்சிய மண்டையோட்டை எடுக்கிறார்கள். அத்தையின் குடும்ப சவக்காலையுள்ள லுபிளினில் புதைகின்றார்கள். இடா அமைதியாக கன்னியர் மடத்திற்கு விடைபெறுகின்றாள்.

இடாவுக்கு அத்தையின் வாழ்க்கை முறை மனதளவில் பிடிக்க ஆரம்பிக்கின்றது. தான் இன்னும் கனியாஸ்திரியாவதற்காக தயாராகவில்லை மன்னிக்கும்படி ஆரம்பத்தில் நிறுத்திய ஜேசுவினுடைய சிலையின் முன் தனிமையில் அமைதியாக கூறுகின்றாள். அத்தையின் மனஉளைச்சல் அதிகமாகின்றது இடாவை பற்றிய சிந்தனைகள் அதிகம் தூண்டுகின்றது. அந்த படுகொலைகள் அடைக்கலம் கொடுத்தவர்களாலே கொல்லப்பட்டது அதிகம் திரும்ப திரும்ப பாதிக்கின்றது. இடாவின் பெற்றோகளின் புகைப்படங்களை திரும்ப திரும்ப வலிகளுடன் பார்க்கின்றாள், தினமும் குடிக்கின்றாள் மெல்ல மெல்ல தன்னிலையிழந்து மாடிப்படியிலிருந்து குதித்து தற்கொலை செய்கின்றாள்.

அத்தையின் இறுதிச்சடங்குக்கு இடா மறுபடியும் வருகின்றாள். கன்னியாஸ்திரி உடைகளை களைகின்றாள் அத்தையின் உடைகளை அணிகின்றாள், தலையைக் கலைத்து அழகாக விடுகின்றாள். அத்தையையே போலவே உடல்மொழியை மாத்துகின்றாள் சிகிரட் புகைத்து பார்க்கின்றாள். மது அருந்துகின்றாள் அத்தையாகவே தன்னை சுவாரஸ்யமாக மாத்துகின்றாள். இறுதிச்சடங்கில் அந்த இளைஞனை திரும்பவும் சந்திக்கின்றாள். அவளிடமிருந்து தொலைக்கப்பட்ட புன்னகையொன்று அரும்புகின்றது. அவனுடன் ஹோட்டலில் நடனம் ஆடுகின்றாள், உடலுறவு கொள்கின்றாள். அதற்குபின் வரும் வசனங்கள் முக்கியமானவை.

“என்ன யோசிக்கின்றாய்..?” இளைஞன்
“ஒன்றும் இல்லை..” இடா
“நாங்கள் இசை நிகழ்ச்சி செய்ய கடாஸ்சிகிக்கு போகின்றோம்.. நீயும் வாவேன்..”
“......................” இடா
“நீ எப்பவாவது கடற்கரைக்கு போய்யிருக்கின்றாயா?”
“நான் வெளியில் எங்கும் போனதில்லை”
“அப்படியானால் வா போவோம்..”
“..............”
“நாங்கள் வாசிக்கும் இசையை நீ கேட்க முடியும்... நாங்கள் கடற்கரையில் சேர்ந்து நடக்கலாம்..”
“அதற்கு அப்புறம்?”
“நாய் ஒன்று வேண்டுவோம்.....திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று சொந்த வீட்டுடன் அழகாக வாழ்வோம்”
“அதற்கு அப்புறம்?”
“அதே வழமையான வாழ்க்கை..”

காலையில் அவன் துயிலெழும்முன் கன்னியாஸ்திரி உடைகளை அணிந்துகொண்டு அவனுக்கு சொல்லிக்கொள்ளாமல் கன்னியர் மடத்திற்க்கு திரும்புகின்றாள்.

உளவியல் ரீதியாக அணுகும் சிறந்த படம் நிறையவே யோசிக்க வைகின்றது. முழுவதும் கறுப்பு வெள்ளையில் படமாக்கபட்டிருகின்றது, 82நிமிடங்கள் ஓடக்கூடிட இந்த திரைப்படம் அழகியலின் உச்சம். பின்னி இசை அதிகம் இல்லாமல் ஓவ்வரு உணர்வுகளும் கட்சிதமாக செறிவாக சொல்ப்படுகின்றது. பல படங்களுக்குக் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அனுபவம் பெற்றிருந்த “லூகாஸ்”இப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி ஆகச்சிறந்த உன்னதமான ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார். 

ஆஸ்கார் விருது பரிந்துரையில் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் அயல்மொழி திரைப்படப் பிரிவில் இடம் பெற்றிருந்தது. 2014 ஆம் ஆண்டு சிறந்த அயல் மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றுள்ளது. ஆஸ்கார் மட்டும் அல்லாமல் Alliance of Women Film Journalists, USABAFTA Awards போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

Directed by - PawełPawlikowski
Music by - Kristian Eidnes Andersen
 



Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP