என் கனா உன் காதல் - குறும்பட அலசல்

>> Sunday 19 April 2015

மீண்டும் மீண்டும் ஈழத்து சினிமாவை வலிமைப்படுதும் அல்லது அதன் இருப்பை உறுதிப்படுத்தும் முகமாக குறும்படங்ள் செறிவாக சமீபகாலமாக வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆரம்ப காலங்களில் இணையத் தளங்களில் வெளியிடப்பட்டாலும் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்படுவது ஆரோக்கியமான சடங்காகவே மாறிக்கொண்டு வருகின்றது. திரையரங்குகளில் குறும்படங்களை பார்வையிடுபவர்களில் கணிசமானவர்கள் ஈழத்து சினிமா முயற்சிகளில் தங்களை இணைத்தவர்கள், சினிமா கனவில் மையமாக சுழல்பவர்கள். தமது சக படைப்பாளிகளிடம் இருந்து குறும்படங்கள் வெளிவரும்போது குடும்ப வைபவமாக ஒன்றுகூடி ஆதரவை சுவாரஸ்யமாக வழங்குபவர்கள். இந்த பரஸ்பர ஒன்று கூடல்கள் ஈழத்து சினிமா வலிமைப்படுத்தலை இனிமையாக ஏற்படுத்தினாலும் தரமான படைப்புகள் வெளியாகும்போதே ஈழத்து சினிமா அவதானிகளைத் தாண்டி வெளியிட  மக்களிடம் கவனத்தை பெற்றுக் கொள்கிறது. பெரும்பாலான படைப்புக்கள் ஈழத்து சினிமா முயற்சியாளர்களைத்தாண்டி வெளியே கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தக்க வகையில் உருவாகுவது இல்லை. சக ஈழத்து படைப்பாளிகள் தங்களைத் தங்களே பரஸ்பரம் பாராட்டிக்கொள்வதோடு நின்றுவிடுகின்றது.

இவ்வாறான சூழ்நிலைகளில் உருவாகி திரையரங்கில் வெளிவிடப்பட்ட குறும்படம் “என் கனா உன் காதல்”. இக் குறும்படத்தின் கதைவரி கூட இதைச் சார்ந்தது. ஈழத்து படைப்பாளி ஒருவர் ஈழத்து சினிமாத்துறையில் தடம்பதிக்க முயன்றுகொண்டு இருப்பவர் அவரின் காதலி அதனை ஆதரித்தாலும் முழுநேரமாக சினிமா கனவில் அதன் முயற்சியில் அவன் ஈடுபடுவதை விரும்பாதவர். ஒரு தொழிலோடு தன்னை பொருத்தி சிக்கல் இல்லாமல் இயங்கிக்கொண்டு சினிமா முயற்சியில் ஈடுபட வலியுறுத்துகின்றாள் காதலி. இதற்கு சமரசம் செய்ய உடன்படாத காதலன் தனது முயற்சிகளை தொடர்ந்தும் தொடுகின்றான். இந்த கருத்து முரண்பாட்டால் இருவருக்கும் இடையிலான காதல் காதலியின் வலுகட்டாயத்தில் முடிவுக்கு வருகின்றது. ஆனால் காதலன் தனது முயற்சியினால் ஜெயிக்கின்றான். இவன் வெற்றியை பார்த்து வியந்த காதலி திரும்பவும் அவனிடம் வருகின்றாள். இவ்வாறு குறும்படம் முடிவடைகின்றது.

உண்மையில் ஈழத்து சினிமா களம் தென்னிந்திய சினிமாவினைபோல் பந்துவிரிந்ததா? ஒருவன் ஈழத்து சினிமா முயற்சியில் வெல்வதுபோல் காட்சிப்படுத்துவதற்கு புறக்காரணியல் சூழ்நிலை உள்ளதா? உண்மையில் இந்தக் கேள்விக்கான விடை அனைவர்க்கும் கசப்பாகத் தெரியும். அந்த இடத்திற்காகவே அனைத்து ஈழத்து கலைஞர்களும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். இப்போதைய சூழ்நிலையில் குறும்பட படைப்பாளிகளின் பொருளாதார வரவீடுகள் குறும்படம் மூலம் எந்தளவுக்கு வருகின்றன என்ற சாரப்பட கேள்விக்கு குறும்படத்திலே ஒரு காட்சியில் கதாநாயகன் சொல்கின்றார் “பெரிசா இல்லை ஆனால் மனசுக்குபிடிச்சு இருக்கு..” என்ற கூற்றுப்பட. இந்த யதார்த்த கள அமைப்பில் சிக்குண்ட நாயகன் தன்னுடைய இலக்கில் ஜெயிப்பதாக காட்சிப்படுத்திய இடம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறும்படத்தில் ஈழத்து சினிமா தளம்  உருவாக்கப்பட்டுவிட்டது என்ற கற்பனை விம்பம் கட்டமைக்கப்பட்டு காட்சிகள் படிமமாகப்பட்டு இருக்கலாம், ஆனால் குறும்படம் அதனை பிரதிபலிக்கவில்லை.

கதாநாயகிக்கு அவர் காதலன் நடிப்புத்துறையில் இயங்குவது ஆரம்பத்தில் பிடிப்பதில்லை என்ற மையக்கரு அழுத்தமாக சொல்லப்படுகிறது. “நீ என்ன செய்துகொண்டு இருக்கின்றாய் என்று வீட்டில் கேட்டால் நடித்து கொண்டு இருக்கின்றான் என்பதை எப்படி வீட்டில் சொல்ல முடியும்” என்கின்றாள். அதே துறையில் பிரபலம் ஆனவுடன் காதலை முறித்த காதலி அவளாகவே தேடிவருகின்றாள். இப்போது அவன் பிரபல்யமாக நடித்துகொண்டு இருக்கின்றான் இதை எப்படி வீட்டில் சொல்லப்போகின்றாள்? இந்த தர்க்கரீதியான முரண்பாட்டுக்கு படத்தில் விடை இல்லை. திரைக்கதையில் கட்சிப்பின்னல்கள் இல்லை.

ஒரு துறையில் ஜெயித்தவுடன் பெண்கள் வந்து ஓட்டிக்கொள்வதாகவும் அதனை காதலன் இயல்பாக ஏற்றுக்கொள்வதாகவும் காட்சிப்படுத்துவது வேடிக்கை இல்லையா? பெண்ணியவாதிகளை சீண்டிப்பார்க்கும் விஷப்பரீட்சை. 

எடுத்துக்கொண்ட கருவுக்கு பொருத்தமான பல்வேறு அடுக்குகளுடன் இயங்கும் திரைக்கதை பலமாக இக் குறும்படத்தில் இல்லை. வந்தோம் போனோம் என்ற ரீதியில் அடிச்சட்டம் இயங்குகின்றது. ஆனால் படத்தினுடைய படிம உருவாக்கம் இயக்குனரின் கடந்த படமான “இலக்கு” குறும்படம்போல் எரிச்சல்தரும் வகையில் இல்லை. கள அமைப்பில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இடங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றன. மிகைப்படதாத நடிப்பை நாயகன் விஷ்ணு, நிரோஷா பிரதிபலித்து இருந்தனர். விஷ்ணுவின் ஏக்கம் கலந்த முகபாவனைகள் மாறும் சட்டங்கள் அருமையாக இருக்கின்றன. நண்பனுடன் ஈழத்து சினிமா கனவைப்பற்றி பேசும்போது முகத்தில் காட்டும் பாவனைகள் சிறந்த நடிகனுக்கான சான்று. சுதர்சனின் இசை தேவைக்கு ஏற்றால்போல் நேர்மையாக அட்டகாசமாக ஒலிக்கின்றது.

வசங்கள் இயல்பாக இருகின்றன. இன்னும் சென்மை படுத்தி இருக்கலாம். நடிக்கக் கேட்டு வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது என்ன கதை என்ன பாத்திரம் என்று எதையும் பேசிகொள்ளாமல் வெறும் ஓகேஓகே என்ற மறுமொழிகளை பிரயோகிக்கின்றார் கதாநாயகன். படு செயற்கையான உரையாடல் உருவாக்கம்.

சிறந்த தேடல்கள் இருந்தால் இன்னும் சிக்கலான ஈழத்து வாசனைகளுடன் பின்னிப்பிணைந்த திரைக்கதையை உருவாக்கி அடுத்த கட்டத்துக்கு நகரலாம். மொன்மையா படங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கி திரையிடலை மேற்கோள்வது ஒரே கிணற்றில் வட்டம் அடிப்பதற்கு ஒப்பானது. இங்கே சிறந்த நடிகர்கள் இருக்கின்றார்கள், ஒளிப்பதிவளர்கள் இருக்கின்றார்கள் இயக்குனர்கள்கூட. ஆனால் திரைக்கதையாசிரியர்கள் மிகக்குறைவு.


Read more...

ஓகே கண்மணி - சினிமா விமர்சனம்

>> Friday 17 April 2015

அலைபாயுதே திரைப்படத்துக்கு பிற்பாடு மணிரத்னத்தினால் சிறந்த வலிமையான திரைப்படத்தை உருவாக்க முடியவில்லை. கடல் இதிலிருந்து எல்லை விலகியது, சிறந்த கதையும் பல்வேறு அடுக்குகளை கொண்ட திரைக்கதையும் அதனை உள்ளவேண்ட பரந்துவிரிந்த திறனாய்வு செய்யும் மனபோக்கையும் கொண்டவர்களால் மட்டுமே அதனை ரசிக்க முடிந்தது. ஜெயமோகனின் இலக்கித்தன்மை வீச்சை புறவயமாகக் கொண்ட அவரது புனைவுச் சித்திரத்தில் மணிரத்தினம் தனது திரைநுட்ப மொழியை உள்நுழைத்து சிதைவடைய செய்துவிடார், முதல்பாதியில் ஜெயமோகனின் புனைவு வெளிச்சம் அதிக வீச்சத்தில் தெறித்தாலும் இரண்டாம் பாதியில் மணிரத்தினத்தின் தனித்துவம் படத்தில் மேலோங்கி வெகுஜன ரசிகர்களை அதிகம்கவர அவரது திரைமொழி முற்பட்டு ஜெயமோகனின் இருப்பை வெற்றிடம் ஆக்கி தொய்வடைந்தது. கடலின் வணிகரீதியான வெற்றி தோல்வியில் முடிந்து. அதற்கு முதல் பொன்னியனின் செல்வனை திரைபடமாக்க முயற்சித்து சிலபல காரணங்களினால் கைவிடப்பட்டது. இறுதியில் மிக அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் ஒரு காதல் கண்மணி.

அதே வழமையான பி. சி. ஸ்ரீராம், ரஹுமான்,வைரமுத்து, மணிரத்தினத்தின் கூட்டணியோடு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஒரு காதல் கண்மணி. இயல்பாக நேர்கோட்டில் பயணிக்கும் லிவிங் டுகேதர் உறவை மையபடுத்திய கதை. கதாநாயகனும், நாயகியும் பிஸியான மும்பை நகரவாழ்கையில் சுழல்பவர்கள். இருவருக்கும் இடையில் எதோச்சையாக நட்பு உருவாகி இருவரையும் நெருக்கப்படுத்துகின்றது. இருவருக்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் உருவாக்கும் சுயதடைகளை,சுதந்திர பறிபோதலை வெறுப்பவர்கள். எனவே தங்களுக்குள் உருவான தற்காலிக கவர்ச்சியை திருமணம் வரை கொண்டு செல்லாமல் சேர்ந்து வாழத் தீர்மானிக்கின்றார்கள். திருமண சம்பிரதாயங்கள் இன்றி ஒரேபடுக்கையை பகிர்ந்து தேவைப்படும்போது கலவியை பூர்த்திசெய்வதும் ஒருவர் ஒருவர்மீது கட்டுபாடுகள் ஏதும் விதிக்காமல் சுதந்திரமாக இயங்கவிடுவதுமாக வாழ்க்கைப்பயணத்தை தொடுக்கின்றார்கள். நாயகி பாரீசுக்கு போகும் வரையும் நாயகன் அமெரிக்கா செல்லும் வரையும் அவர்களுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஏற்பாடு. இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகள்,சோகம்,பிரிவு,நேசம் என்பவற்றை பேசும் சம்பவங்களே படத்தின் தொகுப்பு. இறுதியில் என்ன ஆகின்றது என்பதே கிளைமாக்ஸ்.

அலைபாயுதே திரைப்படத்தில் இருந்த சுவாரசியம் நிச்சயமாக இல்லை. அதே நேரத்தில் அலைபாயுதே திரைப்படத்தின் சாயல் நிறையவே உண்டு. படம் தொடங்கி முடிகிற வரை மின்சார வண்டியும், பேருந்தும், கதாநாயகன் நாயகிஇருவரின் முகத்தையும் அண்மையில் காட்டும் எக்கச்சக்க காட்சிளை பார்கலாம்.நாயகிக்கு திருமண இணைவில் உள்ள கசப்புக்கு வலிமையான ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் சொல்லப்படுகின்றது. நாயகனுக்கு அப்படியான காரணங்கள் சொல்லப்படவில்லை. இருவரும் சேர்ந்து வாழ்வதுபோல் காட்டப்படும் காட்சிகளில் ஏற்படும் நெருக்கம்,ஏக்கங்கள் போன்றவை பாடல் காட்சிகளிலே சொல்லப்படுகின்றது. அதிகமான பாடல்கள் படம் முழுவதும் இனிமையாக மாறிமாறி ஆக்கிரமிக்கின்றன. வழமைபோல் ரஹுமான் அதியுச்சபாணியில் இசையை கட்டவிழ்த்து கிறங்கடிக்கின்றார்.

லீலா சாம்சன், பிரகாஷ்ராஜ் நடித்திருந்த தம்பதி பாத்திரம் ரசிக்கும்வித்தில் இருகின்றன. நிஜத்தில் பரதநாட்டியக்கலைஞர்லீலா சாம்சன்இப்படத்தில் முன்னொரு காலத்தில் சிறந்த கர்னாடக கச்சேரி பாடகியாக இருந்தவராக வருகின்றார். அவருக்கு நினைவு அழியும் நோய். லீலா சாம்சன், பிரகாஷ்ராஜ் பாத்திரங்களுக்கு இடையிலான அன்யோன்யம் நெருக்கம்,காதல் அனைத்தும் நுணுக்கமா ரஹுமான் இசையுடன் அட்டகாசமாக பிரதிபலிக்கின்றன.

மணிரத்தினம் படங்களில் அவருக்குரிய தனிப்பட்ட தளம் ஒன்று இருக்கும். அதிகம் பேசாத மனிதர்கள், குறியீட்டு சமிச்சைகளில் அதிகம் இயங்கும் மனித மனங்கள் போன்றவற்ரை நீங்களே உற்றுநோக்களாம். இன்னும் நுணுக்கமாகப் பார்த்தல் முதல் காட்சிகளிலே படம் ஆரம்பிக்கும், ஒளிப்பதிவில் சிலிர்க்க வைக்கும் கமராக்கோணங்கள் புகைப்படம் பிடிக்கப்பட்ட நவீன ஓவியங்களின் தீற்றுப்போல் படமாக்கப்பட்டு இருக்கும். இந்தப்படமும் முதல் காட்சியிலே ஆரம்பம் ஆகின்றது, மெய்மறக்கவைக்கும் பி. சி. ஸ்ரீராமின் ஒளிபதிவும் உண்டு. படம் முழுக்க மழைவிட்ட பின் உள்ள குளிர்மையைதரும் உணர்வை செறிவாகக்கொண்டுள்ளது. மிக குறுகிய பட்ஜெட்டில் உருவான இத்திரைப்டத்தில் அட்டகாசமான பாடல்கட்சிகள் அட்டகாசமாக ஒளிப்பதிவி செய்யப்படவில்லை. உள்ளக களத்திலே படம் முழுக்க முழுக்க ஒளிப்பது செய்யப்பட்டுள்ளது. மெட்டல் மனதிலே பாடல் விதிவிளக்கு.

மிக ஆழமான உணர்வுபூர்வமான காதல் காட்சிகள் படத்தில் இல்லை. நித்தியாமேனன் கொஞ்சம் பூசிமெலுகினால்போல் இருக்கின்றார். நடிப்பில் மிரட்டுகின்றார். துல்கர் சல்மான் அரவிந்த்சாமிபோல் வழமையான மணிரத்னம்பட ஹீரோபோல் ஜொலிகின்றார். வசங்கள் இந்தமுறை ஆச்சரியம் ஊட்டும் வகையில் அட்டகாசமாக இருக்கிறது, குறுகியதாக இருக்கும் மணிரத்தினம்பட வசங்கள் இம்முறை மாறுதல் அடைந்து இயல்பாக செயற்கைத்தன்கள் இன்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக சுவாரசிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதையோடு வந்துள்ள இப்படத்தில் மணிரத்தினம் தன்னை மீளுருவாக்கம் செய்யமுற்பட்டுள்ளார்.


Read more...

பிஞ்சுத்தடம் - குறும்படம்

>> Sunday 12 April 2015


விளிம்புநிலை மக்களின் வாழ்வின் அபத்தங்களை பேசும் குறும்படம் பிஞ்சுத்தடம். கல்வியினால் ஒரு சமூதாய கட்டமைப்புகளை மாற்ற முடியும் என்ற கருத்தாக்கம் நம்மில் இருந்தாலும் நடைமுறை வாழ்வின்போக்கில் அவை செல்லுபடியாகுமா என்பதின் யதார்த்த பிரதிவாதங்கள் எங்களை சிக்கல்ப்படுத்தும். இலவசக் கல்வி நமது ஈழநாட்டில் செறிவாக இருந்தாலும் உண்மையில் பயன்பட வேண்டிய மக்கள் பயன்படுத்திக் கொள்ளின்றார்களா? அல்லது அவை எப்படி செயல் இழந்துபோகின்றன? செயல் இழந்து போவற்கான யதார்த்த காரணங்கள் என்ன? இவை தொடர்பான வினாக்களுக்கு விடைதரும் குறும்படம் பிஞ்சுத்தடம்.

வறுமையின் ஆதீத மையசுழட்சியில் பிடிமானமாக இயங்கும் ஓர் குடும்பம். தந்தை விறகு வெட்டி சந்தைபப்டுத்தி தனது குடும்பத்தின் வாழ்வாதரங்களை தீர்க்க முயல்கின்றார். நீர்ந்துபோன தனது உடல் பலத்தினால் தொடர்ந்தும் தனது கடுமையான தொழிலை முன்னேடுத்துச் செல்ல முடியாமல் துன்புறுதல் அடைகின்றார். பாடசாலை செல்லும் வயதில் இரு சிறுவயது பிள்ளைகள். அதில் மூத்த மகன் தந்தையின் துன்பங்களை உணர்ந்து மன உளைச்சல் அடைகின்றான். அதிகம் தனிமையில் தன்னை இணைத்து தங்களின் குடும்ப இயலாமையை எண்ணித் தவிக்கின்றான். வயது முதிந்த தந்தைக்கு ஓய்வை வழங்கி தனது பங்களிப்பால் குடும்ப பொருளாதரத்தை தீர்த்துவைக்க முனைகிறான். தனது கல்வியை புறம்தள்ளி தந்தையின் தொழிலை அனுபவம் அற்ற தனது பிஞ்சுக்கையினால் முன்னேடுக்கச் செல்கின்றான்.

மிக இலகுவான கதையாக இருந்தாலும் உரையாடல் இன்றி முழுக்கமுழுக்க சிறுவனின் உளவியல் மனப்போக்கை பற்றியே படம் பேசிகொள்கின்றது. அந்தப் பிஞ்சு சிறுவனின் ஏக்கங்களை சரியாக உள்வேண்டி அவனின் மன எண்ண ஓட்டத்தை கச்சிதமாக ஒளிப்படம் பிடித்திருகின்றனர். மிக முக்கியமாக உயிர் ஓட்டம் தந்து காட்சிப் படுத்த எடுத்துக்கொண்ட படத்தின் களம். ஈழத்தின் வாசனையை படத்தின் களம் நெருக்கமாக பேசுகின்றது. கலை இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வீட்டின் ஓவ்வெரு பொருட்களும் கச்சிதமாக நெறிபடுத்தப்பட்டுள்ளது. அந்த சூழலை ஒளிப்படம் பிடித்த ஒளிப்பதிவாளர் கூட எல்லை மீறாமல் காட்சிகளை படிமமாக்கி உள்ளார்.

தந்தையாக, தாயக நடித்தவர்கள் முகத்தில் காட்டும் சோகங்கள் மிக திறமையான நடிப்பு. அணைத்து ஏக்கங்களையும் கச்சிதமாக முகத்தில் தோற்றுவித்து உள்ளனர். சிறுவனாக நடித்த விதுசன் ஒப்பற்ற கலைஞன். அவர்கள் வீட்டில் உள்ள நாய்கூட நடித்துள்ளது.

அருமையான படமாக இருந்தாலும் ஆவணப்பட சாயலில் தன்னை முன்வைகின்றது. உண்மையான ஒரு குடும்பத்தில் உள்ளே கமராவை ஒளித்துவைத்ததுபோல் யோசிக்க வைகின்றது. படத்தின் இசை அனாவசியமா வலிந்து ஒலிகின்றது. அறிமுகப்பாடல் வலிகள் நிறைந்த எழுச்சிகளை உருவாக்கினாலும் பின்னணி இசை எரிச்சலை ஏற்படுத்துகின்றது. ஃபிகரை தியட்டருக்கு கூட்டிட்டுப் போறது எப்படி குறும்படத்துக்கு இசை அமைத்த மதீசனின் இசையா என்று நம்மப முடியவில்லை. அந்தப் படத்தில் அருமையாக ஒலித்த இசைகள் இங்கே இல்லை. சோகங்களில் படிமானங்களை சரியாக வெளிபடுத்த இசை முயன்றாலும் கச்சிதமாக இல்லை. பொருந்தாத ஒருவித இரைச்சல் தன்மை உள்ள இசை வெளிப்பாடுகள்.

சிறுவன் தனது பாடசாலை கல்லிவியை உதறித்தள்ளிவிட்டு வாழ்வாதாரத்தை காப்பாற்ற விறகு வெட்டச் செல்லும்போதுதான் படித்த பாடசலை சகமாணவர்களை கடக்க நேர்கின்றது, அப்போது எதிர்ப்படும் சகமாணவர்களிடம் இருந்து ஏளன சமிசைகள் கிடைக்கும். அந்தக் காட்சியில் நுணுக்கம் இல்லை. எதிர்ப்படும் சிறுவர்கள் வழங்கிய உடல்மொழிகள் படுசெயற்கையாக பிரதிபலிக்கின்றது.

முதலாவது படத்திலே இயக்குனர் சுதேஸ் கவனிக்க வைக்கின்றார். அடுத்த கட்ட படைப்புகளில் தனது தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளவரா? உற்சாகமாக அவதானிக்கலாம் பார்ப்போம்.


படத்தின் காட்சிக்கோர்புக்கள், பின்கள வடிவமைப்புகள் அட்டகாசம். நமது மக்களின் வாழ்வியல் அபத்தங்களை பேசும் இக்குறும்படத்தை அந்தரங்கமாக எம்முடன் வைத்திருக்கலாம்.

இணையத்தில் பார்க்க..




Read more...

ஃபிகரை தியட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?

>> Saturday 11 April 2015


இதுவரை வந்த ஈழத்து குறும்பட கட்டுமானங்களில் இருந்து விலகி வெகுஜன மேன்போக்கு நகைச்சுவை கட்டமைப்பில் படிமாக்கப்பட்ட குறும்பட வரிசையில் இணையும் குறுந்திரைப்படம் “ஃபிகரை தியட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?” இறுக்கமான கலாச்சார விழுமிய கட்டமைப்புகளை வலிமையாகக்கொண்ட யாழ்ப்பாணப் பிரதேசங்களில் வாலிப் பெண்ணும் ஆணும் சாதாரணமாக இணைத்து இயல்பாக பின்னிப் பிணைந்து திரிவது இயற்கைக்கு முரணான விடயம். தமது காதல் இச்சைகளை பரிபூர்வமாக நேரில் தீர்த்துக்கொள்ள முகம்கொடுக்கும் சங்கடங்கள் பாரதூரமானவை. வவுனியா பிரதேசத்தை தாண்டி வெளியே நமது பார்வையை விரிக்கும்போது புலப்படும் விடயம் அங்குள்ள இளம் காதல் ஜோடிகளுக்கு கிடைக்கும் சுதந்திரம். ஒரே குடைக்குள் கடலை பார்த்துக்கொண்டு புரியும் இச்சைகள் வாலிப காதல் சுகத்தை தீர்த்துவைக்கும்.

யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் காதலர்களுக்கு தங்கள் காதலன்,காதலிகளோடு இயல்பாக நேரடியாக பேசமுடிவதே மிகபெரும் சவாலான மகத்துவமான விடயம். காதலனின் வலிந்த அழைப்புகளுக்கு சமரசம் செய்யமுடியாமல் ஆள்நடமாட்டம் குறைந்த ஒழுங்கைகளில் தஞ்சம் அடைவது சிலகாதலிகளின் வழமை. பெரும்பாலான காதலர்கள் இப்படி இணைவது மிகக்குறைவு என்று சொல்லலாம். அவர்கள் வாழ்ந்த வளர்க்கப்பட்ட சமுதாயம் அவர்களை உற்றுநோகும்விதம் பெண்களை பெண்கள் உடனும் ஆண்களை ஆண்கள் உடனும் தனித்துவமாக வைத்திருக்க விரும்புகிறது. அவ்வாறு அமையாத சந்தர்பத்தில் ஏடாகூடமா அவர்கள் மீது பார்வையை மையப்படுத்துகின்றது. அது பல கூப்பாடுகளையும் பயம் கொள்ளச்செய்யும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தி கொடுகின்றது. இதனாலே பல யாழ்காதல்கள் செல்லிடை தொலைபேசிகளுடனும், வாட்ஸாப் குறுஞ்செய்திகளுடன் பரிதவமாக இயங்குகின்றது.

இந்த விடயங்களின் மையக்கூறுகளை,வாலிபக் காதலர்களின் ஏக்கங்களை உள்வேண்டி வெகுஜன சினிமாக்களின் அபத்த நகச்சுவை உணர்வுகளுடன் குறும்படப் பாணியில் சுவாரசியம் தருகின்றது சிவராஜின் ஃபிகரை தியட்டருக்கு கூட்டிட்டுப் போறது எப்படி? குறும்படம். சாதாரண ஓர் இளம் ஜோடி காதலின் எளிய சுலழலும் விளையாட்டுகளில் சிக்கிக்கொண்டு செல்லிடை தொலைபேசியில் தமது காதல் மகத்துவ ஏக்கங்களை தீர்த்துக்கொள்கின்றனர். எப்பாடுபட்டாவது தனது காதலியை தியட்டருக்கு கூட்டிசெல்ல பாரியளவில் விருப்பப்படுகின்றான் காதலன். அவனுக்கு முன்னிற்கும் மிகப்பெரிய சவாலில் முதன்மையானது தனது காதலியை தன்னுடன் தியட்டருக்கு வர சம்மதிக்கவைப்பது. ஆரம்பத்தில் காதலி மிக முரண்டுபிடித்தாலும் தனது காதலனுக்கு உரிய அதீத கெஞ்சுதல்களால் அவளின் அடிப்படை பயத்தை போக்கி சம்மதிக்கவைக்கின்றான். அவளின் அடிப்படை பயத்தைபோக்க தன்னை மிகவலிமையானவனாக காதலிக்கு முன் ஓர் போலி விம்பத்தை கடமைகின்றான்.

நிஜத்துக்கும் அவன் கட்டமைத்த போலி விம்பங்களுகும் இடையிலான வேறுபாடுகள் மிகப்பெரிதாக இருந்தாலும் அதனை சாத்தியப்படுத்த சில திட்டமிடல்களை தனது கற்பனைகளளில் இணைத்து பொருத்திப் பார்கின்றான். அவன் கற்பனைகளே அவன் கற்பனை செய்த திட்டத்தின் முரண்பாடுகளை விழித்துக்காட்டுகின்றது. அவை சிரிப்பை வரவைக்கும் முகமாக திரைக்கதையில் சரியாகப் பின்னப்பட்டுள்ளது. அவை காட்சிப்படுத்திய நகைமுரண்களை பார்க்கும்போது இயல்பாக சிரிக்கத் தோன்றுகின்றது. இறுதியில் எப்படி தனது காதலியை தியட்டருக்கு கூட்டிச் செல்கின்றான் என்ற கலகலப்பான முடிவுடன் படம் நகர்கின்றது. அதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்க. வெறும் சிரிப்பை பார்வையார்களிடம் இருந்து வரவைப்பதே இக்குறும்படத்தின் நோக்கமாக இருப்பதினால் அதில் இக்குறும்படம் வெற்றிகண்டுவிடுகின்றது.

எழுதப்பட்ட வசங்கள் மிகக் கச்சிதமாக அமைத்து இருகின்றன. அவை சொல்லப்படும் இடங்களும் காலநிலமைக்கு ஏற்ப வசன உச்சரிப்புக்களும் நடிகர்களின் முகபாவனைகளும் சிக்கலின்றி மாறும் தொய்வற்ற போக்கு ஆழமாகக் கவருகின்றது. முக்கியமாக காதலன் காதலியாக நடித்த இருவரின் கதாப்பாத்திர தெரிவுகள் அட்டகாசம். காதலனாக நடித்த காண்டிபனும் காதலியாக நடித்த ஷாணாவும் செயற்கைத்தனங்கள் இன்றி யதார்த்தப்போக்குடன் தம்மை இணைத்துள்ளனர். இதுவரை பார்த்த குறும்படங்களில் நடித்த நடிகைகளுடன் ஒப்பிடும்போது ஷாணாவின் நடிப்பு, உடல் மொழிகள் ஊடாக பாவனைகளை வெளிபடுத்தும் வலுவான திறன்கள் மிகச்சிறந்த நடிகைக்கான அடித்தளத்தை தெளிவாக காட்டுகின்றது. 

மதீசனின் இசை கட்டமைப்புகள் குறும்பட திரைமொழியின் செறிவுகளை குறைக்காமல் தொய்வற்று கலகலப்பாக கொண்டு செல்ல பாரியளவில் முனைகின்றது. படத்தின் காட்சிக்கோர்ப்புக்கள் (editing), நிறச்சமநிலை (colour balancing) மிக நுணுக்கமான உருவாக்கப்பட்டுள்ளது. சிவராஜின் இத்திரைப்படம் கவனிக்கத்த ஈழத்து வெகுஜன குறும்பட வரிசையில் தன்னை இணைத்துள்ளது. அனுபவம் மிக்க இயக்கம்.

இன்னும் யூடூப்பில் வெளிவிடப் படவில்லை. வெளிவந்தவுடன் இணைப்பை இணைகின்றேன்.


Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP