American Sniper (2014) - விமர்சனம்

>> Tuesday 24 March 2015

அமெரிக்கன் ஸ்னைப்பர் திரைப்படம் கடந்த ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பிடித்தபடம். படம் பார்க்கும்போது முள்ளம்தண்டுகள் ஜில்லிட்டது. மிக உண்மை விளிம்புக்கு அருகில் படமாக்கப்பட்டுள்ள மற்றுமொரு உன்னதமான படம். அமெரிக்க இராணுவத் தேசியவாதம் செறிவாக இருந்தாலும் அவை எவையும் உறுத்தவில்லை.

அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப் பிரிவான நேவி சீல்ஸ் (NAVY SEALS) படைபிரிவைச் சேர்ந்த கிறிஸ் கைல் என்று அழைக்கப்பட்ட தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் துப்பாகி வீரரின் உண்மையான வாழ்க்கையை  அவரே கைப்பட எழுதிய சுயசரிதையை அடிப்படையாக வைத்து, அந்தப் புத்தகத்தின் பெயரிலேயே பிரபல ஹாலிவூட் நடிகரும் இயக்குனருமான கிலின்ட் ஈஸ்ட்வூட் இனால் உருவாக்கப்பட்ட படம்தான் அமெரிக்கன் ஸ்னைப்பர். அவரின் சொந்தா வாழ்க்கை அதன் ஊடக அமெரிக்க நாட்டுப்பற்று,ஆழமான காதல் என்று திரைக்கதை அபத்தங்கள் இன்றி சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் தந்தையுடன் தூரவிருந்து குறிபார்த்து மிருகங்களை வேட்டையாடி கச்சிதமாக குறிபார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொண்டவர் கிறிஸ் கைல். இளம்வயதில் Cow boy யாக சகோதரனுடன் வெட்டியாக ஜாலியாக சுத்தித்திரிகின்றார். ஒரு கட்டத்தில் அமெரிக்க தாய்நாட்டுக்கு தீவீரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிக்க இராணுவத்தில் இணைய கிளம்புகின்றார். இணையும்போது அவருக்கு மட்டும்தான் வயது அதிகம். கடும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. கடும் இராணுவவ் பயிற்சியின் இடையில் ஓர் பெண்ணுடன் காதலும் இயல்பாக அரும்புகின்றது. நேவி சீல்ஸ் பிரிவில் தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் திறமையில் மிகையாக ஜொலிகின்றார். அந்தப்பணியே கிறிஸ் கைலுக்கு வழங்கப்படுகின்றது. காதலும் திருமணத்தில் ஆர்பாட்டம் இல்லாமல் முடிகின்றது.


1999 தொடக்கம் 2009 வரை அவர் ஈராக் யுத்தத்தில் அமெரிக்க மரைன் அதிரடிப்படை வீரர்களுக்கு பக்கத்துணையாக குறிபார்த்துச் சுடும் வீரராகப் பணியாற்றுகின்றார். அமெரிக்க வீரர்கள் ஈராக் வீதிவழியே முன்னேறிச்செல்லும்போது தொலைவில் உயரமான கட்டிடத்தின் உச்சியில் சினைப்பர் துப்பாகியுடன் படுத்திருந்து முன்னேறிச்செல்லும் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார். அவர்களை நுணுக்காமாக கவனித்து அவர்களை ரகசியமாக தாக்கவரும் எதிராளிகளை விவேகமாக சுட்டுத்தள்ளுவார். அவரின் திறமையில் அதிக நமிக்கைவைத்து அவரின் குழு பயமின்றி நமக்கு மேலே ஆளிருக்கின்றான் எல்லாத்தையும் பாத்துக்கா என்ற தைரியத்தில் தயக்கம் இன்றி முன்னேறுகின்றார்கள்.

மிகவும்பொறுப்பான வேலையில் கிறிஸ் இருக்கின்றார். பலசமயம் தனது வீரர்களை காப்பாற்ற மனட் சாச்சியையும் ஒளித்துவைத்துக்கொண்டு கடமையில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம். ஒருமுறை படை முன்னேறும் நடவடிக்கையில் முனையும்போது ஒரு முஸ்லிம் பெண்ணும் சிறுவனும் வருகின்றார்கள். கிறிஸ் அவர்களை சினைப்பர் துப்பாக்கியுடன் இணைக்கப்பட்ட தொலைநோக்கியில் நோக்கும்போது அந்தப் பெண் ஓர் வெடிகுண்டை சிறுவனிடம் கொடுத்து வீசச்சொல்லுகின்றாள். கிறிஸ் பாரபச்சம் பார்காமல் வீரர்களை காப்பாற்ற வெடிகுண்டை வீச முனையும் சிறுவனை சுட்டுத்தள்ளுகின்றான். சிறுவன் சாய்ந்துவிழ அழுதுகொண்டே அந்த வெடிகுண்டை எடுத்து வீசவரும் அந்தப் பெண்ணையும் சுட்டுத்தள்ளுகின்றான். உறையவைக்கும் காட்சியில் அதுவும் ஒன்று. இதனாலேயே கிறிஸின் குழுவில் இருக்கும் அணைத்து வீரர்களுக்கும் கிறிசை பிடித்து விடுகின்றது. இவன் இருக்கும் வரை நாம் சாகமாட்டோம் என்று தீவிரமாக கிறிஸின் குழாம் வீரர்கள் நம்புகின்றார்கள். இதனாலேயே ஈராக்கிய தீவிரவாதிகலுக்கு இவன்மீது எரிச்சல் அதிகரிக்கின்றது. "ரமாடியின் சாத்தான்" எனும் பெயரை அவர்கள் வைக்கின்றார்கள். கிறிசை கொல்வதற்கு ஈராக்கியத் தீவிரவாதிகள் முயல்கின்றார்கள் ஆனால் இறுதிவரை அவர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை.


விடுமுறைக்கு வீடுவரும்போது அவனின் குடும்பம் இயல்பாக காட்டப்படுகின்றது. போர் முனையில் கணவன் இருப்பதை எண்ணி துயர் அடையும் மனைவி வேலையை விடச்சொல்கின்றாள். ஆனால் தேசம்தான் முக்கியம் என்று மீண்டும் மீண்டும் போர்முனைக்குச் செல்கின்றார். மகனை அழைத்துக்கொண்டு டயர்மாற்றும் இடத்துக்குச் செல்லும்போது முன்னால் இராணுவ வீரன் ஒருவன் கிறிசை சந்திகின்றான். அவனை கிறிஸ் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தன்னை யாரென்று கூறும் அந்த முன்னால் வீரர்,  இன்று உங்களால்த்தான் நான் உயிர் வாழ்கிறேன். உங்களுடன் ரமாடியில் ஒரு போர்க்களத்தில் நானும் ஈடுபட்டிருந்தேன். அங்கே என்னை நீங்கள் எதிரிகளிடமிருந்து கப்பாற்றினீர்கள். நான் இன்று எனது பிள்ளைகள், மனைவியுடன் வாழ மகிச்சியுடன் முடிகின்றதென்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். மிக்க நன்றி என்று சொல்லும் அவர் இறுதியாக குனிந்து கிறிஸின் மகனிடம் "உனது தகப்பனார் நிஜமான வீரன்" என்று சொல்லிவிட்டுப் போகின்றார். மிக இயல்பாக கண்கலங்கவைக்கும் வகையில் படமாக்கப் பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் இராணுவத்தில் இருந்து வீடுவரும் கிறிஸ்க்கு மனஉளைச்சல் அதிகரிக்கின்றது. போர் முனை கொடூர சம்பவங்கள் அழுத்தத்தை தூண்டுகின்றது. ஒரு மனோ தத்துவ நிபுணரின் ஆலோசனையினால் முன்னால் காயப்பட்ட இராணுவ வீரர்களின் சங்கத்துடன் இணந்து அவர்களுக்கு ஓய்வுநேரப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார் கிறிஸ்.

2013 இல் அமெரிக்க ராணுவத்தின் முன்னைய வீரர்களுக்கான துப்பாக்கிச் சுடும் தளமொன்றில் அவரும் அவரது நண்பர் ஒருவரும் இன்னொரு அமெரிக்க வீரரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். கிட்டதட்ட 160 பேரை சுட்டுத்தள்ளியதாக அவரின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. உண்மையில் அதற்கும்மேல் எண்ணிக்கை இருக்கலாம் என்று சொல்லபப்டுகின்றது. உண்மையில் நடந்த சம்பவங்களை எப்படி பாடமாக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் சான்று. உறையவைக்கும் பலகாட்சிகள் படத்தில் உண்டு நீங்களே பார்த்து கண்டுகொள்க.

The Hurt Locker திரைப்படத்தைவிட இப்படம் என்னை இன்னும் கவர்ந்தது. உங்களையும் சந்தேகம் இல்லாமல் கவரும். அட்டகாசமான திரைப்படம். மிஸ் பண்ணவேண்டாம்.

                               



Read more...

Captain Phillips - ஓர் பார்வை

>> Friday 20 March 2015

கடற்கொள்ளை என்றவுடன் இயல்பாக நமக்கு நினைவு வருவது சோமாலியா. ஏடன் வளைகுடா பகுதியில் அதிகமாக சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும் கப்பம் கொடுக்கப்பட்டு மீட்கப்படுவதும் தினசரி செய்தியில் நாம் படித்து உச்சுக் கொட்டியவைதான். நிஜமாக 2009இல் ஏறக்குறைய கடத்தப்பட்ட அமெரிக்காவுக்கு சொந்தமான கப்பல் எம்.வி.மேர்ஸ் அலபாமா. அதன் கப்டன் ரிச்சர்ட் பிலிப்ஸ் தான் சந்தித்த மோசமான கடத்தல் அனுபவத்தை தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டார். பில்லி ரே அந்த புஸ்தகத்தை தழுவி திரைக்கதை எழுத Paul Greengrass இனால் இயக்கப்பட்டு வெளியாகிய திரைப்படம் Captain Phillips.

என்னதான் ஆபத்தான பயணமாக இருந்தாலும் சரக்கு கப்பலில் பாதுகாப்புக்குகூட ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது. இப்படி ஆயுதங்கள் இல்லாமல் அப்பாவித்தனமாக ஏக்கச்சக்க பொருட்களுடன் சிக்கும் கப்பல்களை நைஸாக கடத்துவது சோமாலியர்களின் வாடிக்கை. சோமாலியர்களுக்கு ஏகப்பட்ட வறுமை அவர்களின் வளங்களை மேற்கத்திய நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு கொள்ளையடிகின்றன, உள்நாட்டு சண்டைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை இந்தக் கெடுபிடிக்குள் அவர்ளின் கடல் எல்லையில் ஊடுருவி மீன்களை அமெரிக்க கப்பல்கள் அபேஸ் செய்து விடுகின்றன. பொறுத்துப் பார்த்த சோமாலியர்கள் பணத்துக்காக கடற்கொள்ளையில் குதித்தனர். பெரும்பாலும் இந்தக் கொள்ளையில் ஈடுபடுவது நொந்துபோன சோமாலிய மீனவர்களே. இவர்களுக்கு தலைவர்கள் இருப்பார்கள் பெரும்பாலான டாலர்களை அவர்கள் சுருட்டிவிடுவார்கள். உயிரை பணயம் வைத்து கடத்ததுவர்களின் வாழ்க்கை மேன்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் மறுபடி மறுபடி கப்பல்களை கடத்த கிளம்புகின்றார்கள்.

ஓமன் நாட்டில் இருந்து 24,500 டன் சரக்கு மற்றும் 20 கப்பல் ஊழியர்களோடு அலபாமா கப்பல் கென்யாவை நோக்கி பயணிக்கின்றது. அதன் கப்படன் ரிச்சர்ட் பிலிப்ஸ் ஏடன் வளைகுடா வழியாக செல்லவேண்டும் என்றபோதே உஷாராகி விடுகின்றார், அடிவயிற்றில் கொஞ்சம் பயத்தோடு கட்டுக்கோப்பாக கப்பலை வழிநடத்திச் செல்கின்றார். பயந்ததுபோல் இரண்டு படகுகளில் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிகளோடு பின்தொடர்ந்து வருகின்றார்கள், கப்பலில் பதற்றம் அதிகரிக்கின்றது. ராடரில் அவர்கள் வேகம் வேகமாக நெருங்குவது தெரிகின்றது. அவர்கள் நிச்சயம் வயலசில் கப்பலில் பேசுவதை ஓட்டுக் கேட்பார்கள் என்று தெரியும். ரிச்சர்ட் பிலிப்ஸ் அமெரிக்க நேவியுடன் கதைப்பதுபோலவும் அவர்கள் ஐந்து நிமிடத்தில் ஹெலிகாப்டரில் வந்து தாக்கபோவதாகவும் தெரிவிப்பதுபோல உடாஸ் விட்டுப் பார்கின்றார். இதை அவதானித்த கொளையர்களில் ஒரு படகு நிஜம் என்று நம்பி தப்பித்தோம் பிழைத்தோமென்று யூ-டேர்ன் அடித்து ஓடுகின்றது. மற்றப்படகில் வந்தவர்கள் இந்த பாச்சா நம்கிட்ட பலிக்காதென்று விடாமல் கலைகின்றனர்.

ரொம்ப அருகில் நெருங்கிய கடற்கொள்ளையர்களை சமாளிக்க முடியவில்லை. அட்டகாசமாக கப்பலில் தாவி நுழைந்து வந்துவிடுகின்றார்கள். கப்பல் பணியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கப்பலின் பலபகுதியில் மறைந்து இருகின்றார்கள். கொள்ளையர்கள் நான்கு பேர்கள் கையிலும் ஏகே-47 துப்பாக்கிகள். ரிச்சர்ட் பிலிப்ஸ் கொள்ளைக்கூட்ட தலைவன் முசியுடன் பேச்சுவார்த்தை நடத்திப்பார்கின்றார். தங்களிடம் முப்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் அதை எடுத்துக்கொண்டு போகச் சொல்கின்றார். அவர்கள் தங்களை பார்த்தால் பிச்சைகாரர்போலாவா இருக்கீது அடிங்கொய்யால.. நமக்கு பில்லியன் டொலர்கள் வேணும் என்கின்றனர். கப்பல் பணியாளர்கள் எங்கே ஒளித்து இருக்கின்றார்கள் என்று சுத்தித் தேடும்போது ஒருவனுக்கு காலில் கண்ணாடித் துகள்கள் கிழித்துவிடுகின்றன. இந்த நேரத்தில் வசமாக கொள்ளைகூட்டத் தலைவனை கப்பல் பணியாளர்கள் மடக்கி பிடித்து விடுகின்றனர்.

முப்பாதாயிரம் டொலர்களும் சோமாலியாவுக்குபோக படகும் தருகின்றோம் அப்படியே கிளம்பச் சொல்கின்றனர். சரியேன்று கிளம்பும்போது வசமாக ரிச்சர்ட் பிலிப்சையும் அந்த படகில் தள்ளிக்கொண்டு அதாவது கடத்திக்கொண்டு சோமாலிய கிளம்புகின்றனர். ஒரு கணத்தில் சூழ்நிலைகள் அப்படியே மாறுகின்றது. அப்புறம் எப்படி ரிச்சர்ட் பிலிப்சை மீட்டனர் என்பதே மீதிக்கதை.

அட்டகாசமாக எழுதப்பட்ட திரைக்கதை படம் முடியும்வரை சலிப்பூட்டாமல் வைத்திருகின்றது. நலிவடைந்த பொருளாதாரத்தில் சிக்கி நொந்துபோன சோமாலியர்களை இயல்பாக படம் பித்துள்ளனர். மயிர்கூச்செறியும் அக்சன் மசாலாக்கள் இல்லை(வழமையான டாம் ஹாங்ஸ்ன் படங்கள் போலவே). வசனங்கள் ரொம்பவே பிடிக்கின்றன. நாங்கள் அல்கொய்தா இல்லை எந்த கோரிக்கையும் வைக்கப்போவதும் இல்லை, யாரையும் கொல்லவும் மாட்டடோம் எங்களுக்கு வேண்டியது அமெரிக்க டாலர்கள் இது வெறும்  பிசினஸ் அப்படின்னு கொளையர்கள் அடிக்கடி சொல்கின்ற வசனங்கள் கவனிக்க வைகின்றது.

போனமுறை கடத்திய கப்பலில் இருந்து ஆறு மில்லியன் டொலர்கள் சுளையாகக் கிடைத்தது என்கிறான் முசி. அப்புறம் ஏன் இன்னும் இங்க அலைஞ்சிட்டு இருக்குறீங்க என்று ரிச்சர்ட் பிலிப்ஸ் வினவ அவர்களிடம் பதில் இல்லை. உண்மையில் அவர்கள் தலைவர்கள் உரிஞ்சி விடுகின்றனர். சோமாலியர்களின் வறுமைகள் அவர்களின் பின்னணிகள் தொடர்பாக பெரிதாக படத்தில் பேசப்படவில்லை ஒன்று இரண்டு வாசங்களே சாக்குக்கு வருகின்றன அவ்வளவுதான். மற்றபடி அமெரிக்க தேசியவாதம்தான்.

ரிச்சர்ட் பிலிப்ஸ்சாக நடித்தவர் நமக்கு ரொம்பவே பிடிக்கும் நடிகர் டாம் ஹாங்ஸ்ன். இவரின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை ஐந்து முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டு முறை ஆஸ்காரை தட்டிச்சென்றவர். இறுதிக்காட்சியில் நர்சுடன் உரையாடும்போது அதிர்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் பல்வேறு உணர்சிகளை வெளிபடுத்தத் துடித்தல் என்று அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். இது மட்டும் அல்ல படம் முழுக்க இவரின் நடிபாற்றல்தான் செறிவாக செறிந்துள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்களின் தலைவனாக நடித்திருப்பவர் பர்கத் அப்ரி இவரின் நடிப்பும் டாம் ஹாங்ஸ்னுக்கு சளைத்தது இல்லை. படத்தின் இசை பதற்றத்தில் தொடர்ந்தும் வைத்திருக்க அடக்சமாக உதவுகின்றது. (குறுந்தாடியுடன் டாம் ஹாங்ஸ்னை பார்க்க சாட்சாத் சாரு நிவேதிதாவை பார்த்ததுபோல் இருக்கிறது... எனக்கு மட்டும் தானா?) உண்மை சம்பவத்தை இயல்பாக. படமாக்கி இருகின்றார்கள் கண்டிப்பாக பார்கலாம்.

                               டிரைலர்



Read more...

பாக்குநீரிணையில் இந்திய மீனவர்கள் சுடப்படுவது ஏன்?

>> Tuesday 17 March 2015


வடக்கில் ஈழத்துக்கான போர் வலிமையடைந்தபோது வடக்குக் கடல் பிராயந்தியங்கள் அபாயகரமாக மாறியது. ஏறத்தால முப்பது வீதமான வடக்கு மக்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டிருந்தனர். கடலில் செல்லத் தடை விதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்கள் அடியோடு சாய்க்கப்பட்டது. பாரம்பரியமாக செய்துவந்த மீன்பிடித்துக்தொழிலை விடுத்து வேறுதொழிலுக்கும் வறுமைக்கும் தள்ளப்பட்டனர். கிட்டதட்ட இருவது வருடங்குளுக்கு மேலாக கடலில் மீன்பிடிக்க மறுக்கப்பட்டனர். 1990 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இத்தடை 1995ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை காலங்கலிலும் 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்த காலத்தின் தொடர்ச்சியாக 2006 வரையான காலப்பகுதியிலும் வடக்கு மீனவர்கள் பகுதியளவான ஆழ்கடல் மீன்பிடிக்கு அரசாங்கத்தினால் கடும்கொடுபிடிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். 2009ஆம் ஆண்டு இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்தபின்னர் முழுத்தடையும் நீக்கப்பட்டது. வடக்கு மீனவர்கள் சுதந்திரமாக பழையபடி மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பாக்குநீரிணை பகுதியான வடபகுதி கடலில் ஏராளமான செழிப்பான மீன்கள் கொத்துக்கொத்தாக கிடைக்கும். வடக்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் தென்பகுதி மீனவர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் வடபகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படிருன்தனர். ஆனால் வடபகுதி மீனவர்கள் எந்த சலுகையுடனும் அவர்களின் சொந்தப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காலப்பகுதியில் இந்திய மீனவர்களும் இலங்கை வடக்கு கடல் எல்லைகளில் ஊடுருவி அத்துமீறி மீன்பிடித்தனர். சில சமயம் அல்ல பலசமயம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் அச்சுறுத்தப்பட்டனர், சேதப்படுத்தப் பட்டனர்,கைது செய்படனர், சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மோதல்கள் முடிந்து பரவசத்துடன் மீன்பிடிக்கவந்த பாரம்பரிய வடபகுதி மக்கள் தென் இலங்கை மீனவர்களின் தலையிடுகளினாலும் இந்திய மீனவர்களின் அத்து மீறல்களினாலும் அவதிப்பட்டனர். எக்கச்சக்க வலிகளை இழப்புகளைத் தாண்டி இறுதியில் மீன்பிடிக்க வரும்போது முகம்கொடுக்கும் பிரச்சனைகள் வடபகுதி மீனவர்களை ரொம்பவே எரிச்சல் படுத்தின. ஈழப்போர் ஆரம்பிக்கபட முன்பும் ஆரம்ப காலங்களிலும் இதே முரண்பாடுகளை இந்தியர்கலோடு வடபகுதி மீனவர்கள் கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே தனிப்பட்ட உறவுமுறைகள் இருந்தபோதும் பொருளாதாரம் என்று வரும்போது இருவரும் முட்டிமோதிகொண்டனர். இன்றுவரை அதன் தாக்கங்கள் முரண்பாடுகள் தொடர்கின்றன.

வடபகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மீனர்கள் தங்களுடைய கடற்பரப்பை ஆழமாக நேசித்தனர். தமக்குதானே பல கடப்பாடுகளை இட்டுக்கொண்டனர். பாரிய மடிகளைப் பயன்படுத்தி தொழில் செய்யும் ஆழ்கடல் இழுவைப்படகு முறை, இலை குழைகளைப் பயன்படுத்தி ஆழம் குறைந்த கடற்பரப்பில் கணவாய், இறால்களைப் பிடிக்கும் முறை, தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறை உள்ளிட்ட பல முறையற்ற மீன்பிடி முறைகளை தடை செய்திருக்கின்றார்கள். இந்த முறைகளினால் அதிகளவான மீன்களை மட்டட்டு பிடிக்க முடியும். ஆனால், அந்த முறைகள், கடற்பாறைகள், கடற்பாசிகள், பிளாந்தன்கள் உள்ளிட்ட மீன் விருத்திக்கு அவசியமான வளங்களை கொடூரமாக சிதைத்துவிடும். இவாறான முறைகளை கண்டிப்புடன் தடைசெய்து சாதரண முறையில் வடபகுதி மீனவர்கள் மீன்படித்து வந்தனர் வருகின்றனர். 

அத்துமீறும் இந்திய மீனவர்கள் இதற்கு நேர்மாறாக பாரிய இயந்திர படகுகளில் ரோலர்கள் மூலம் மீன்பிடிக்கின்றனர். இதனை எந்த வைகையிலும் ஏற்றுகொள்ள முடியாது என்பதில் இலங்கை அரசாங்கமும் வடபகுதி மீனவர்களும் உறுதியாக இருகின்றார்கள். பலதடவை இலங்கை கடற்படையினாறால் தாக்குதலுக்கு உள்ளான இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் ஊடுருவுகின்றனர். வடபகு மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு முறையிட்டுக் கொண்டிருகின்றனர். இலங்கை கடற்படை அத்து மீறும் இந்தியர்களை பாரபச்சம் பார்காமல் சுடத் தொடங்கி விட்டனர். இப்படி சுடப்படும் மீனவர்கள் தொடர்பாக தென் இந்தியாவில் காடப்படும் ஊடக விம்பம் விநோதமானது. தமிழர்களை கண்டால் சிங்களவனுக்கு பிடிக்காது அதனாலே சுடுகின்றனர் என்கிறனர். அப்படியே தமிழ்நாட்டு மாநில அரசு இந்திய மக்களிடையே அதன் வலிகளை வைத்து அரசியல் செய்கின்றனர்.

தமிழர்களை தொடர்ந்தும் சென்டிமென்ட்களினால் ஏமாற்ற முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. அதையே தமிழக அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பாரபச்சமின்றி செய்கின்றனர். அறிவியல் ரீதியாக இதனை, இப்பிரச்சனையை சிந்திப்பவர்கள், புரிந்து கொண்டவர்கள் தமிழகத்தில் மிகக்குறைவு. அவர்களின் குரல்கள் ஒலிக்கவும் விடப்படுவதில்லை,மறைக்கப்படுகின்றன.

எல்லாமே பொருளாதார நலன்களை சார்ந்தே இயங்குகின்றன. உறவு,பாசம்,தொப்புள்க்கொடி உறவு என்று சொலிக்கொண்டு நமக்கு நாமே போலி விம்பங்களை கட்டமைக்கின்றோம். ஆனால் யாதர்த்தமா வாழ்க்கை மிகமோசமானதாக இருக்கிறது. எல்லாமே போட்டி, கொஞ்சம் அசந்தால் மனிதனை மனிதனே பொரித்துச் சாப்பிடுவார்கள்.

அண்மையில் ஒளிப்பரப்பப்பட்ட தந்தி தொலைகாட்சியின் பிரத்யேக ரணில் விக்ரமசிங்கவினுடையை பேட்டியில் இது தொடர்பான கேள்விகள் எழுப்பட்டன. இந்திய மீனவர்கள் சுடப்படுவது  நியாயமா என்று கேட்கப்பட்டது. அதற்கு ரணில் விக்ரமசிங்க கொடுத்த பதில்கள் சுவாரசியமானது. ஒருவரினுடைய வீட்டில் கொள்ளையிட வரும்போது தற்பாதுகாப்புக்கு அவர்களை கொள்ள முடியும் என்று சட்டம் சொல்கின்றது. எமது நாட்டுக்குள்ளே நுழைந்து மீன்களை கொள்ளையிடும்போது நாங்கள் என்ன செய்முடியும்? இப்படி ரணில் விக்ரமசிங்கவின் பதில் அமைத்திருந்தது.  தொடர்ந்தும் உயிர்பலிகள் தொடருமா? தீர்வு எப்படி இருக்கும்?



Read more...

பாரதப் பிரதமரின் சுவாரசிய யாழ்ப்பாண பயணம்

>> Sunday 15 March 2015

பொதுவாக சிங்களவர்களுக்கு இந்தியர்களை கண்டாலே ஆகாது. கரப்பான்பூச்சியை கண்டதுபோல் முகம் சுளிப்பார்கள். அதுவும் இந்திய கிரிக்கெட் அணியை கண்டாலே அவர்கள் முகம் சிவந்து ஜிவ்வென்று எகிறும். தமிழ் நாட்டு பிளேயர்களை கண்டால் ஒருபடிமேல போய் இனவாதங்கள் வாயிலிருந்து சீரும். சிங்களவர்கள் மத்தியில் படிப்பதால் இந்தமாதி சமாச்சாரங்களை அதிகம் காணவேண்டிய நிர்பந்தம். இதனாலே சிங்கள நண்பர்களுடன் கிரிக்கெட் பார்ப்பதை தவிர்பேன். இந்தனை காழ்ப்புணர்வு இந்தியாமேல் இருந்தாலும் போலிவூட் சினிமாவை மட்டும் இரகசியமாக பார்ப்பார்கள். அதிலும் சிங்களப் பெண்களுக்கு ஷாருக்கான்மீது மட்டட்ட வினோதக் காதால். நிற்க இப்போ ஏன் இது எல்லாம்?.. சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்தியப் பிரதமர் மோடியின் விஜயம் இந்தியாவுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் சிக்கலின்றி நடந்து முடிந்தது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மேற்கொண்ட இலங்கை பயணத்தின் போதுதான் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தயாரிக்கப்பட்ட விடயங்களைத் தான் இந்திய இலங்கை ஒப்பந்தமாக ராஜீவ்,ஜே.ஆர் 1987இல் கைச்சாத்திட்டனர். தமிழர்கள் ஒருமனதாக இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த்தை ஏற்றுக்கொண்டாலும் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு எரிச்சலை ரொம்பவே கொடுத்தது. இலங்கை உள்விடயங்களில் தலையிட்டது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதன் வெளிப்பாடாக ஒப்பந்தம் கைசாதிட்டுவிட்டு ராஜீவ்காந்தி திரும்பும் வேளையில் அணிவகுப்பு மரியாதையின்போது இலங்கை கடற்டை சிப்பாயால் பிரடியில் துப்பாக்கியால் தாக்பட்டார். இதனால் 28 வருடங்கள் புறகணிக்கப்பட்ட அரசுமுறை பயணத்தை மோடி மீள் உயிர்கொடுத்தார்.

பெரும் இடைவெளிகளிகயான 28 வருடங்கள் பின் தற்போதைய பிரதமர் மோடி இலங்கைக்கு இயல்பாக வந்தடைந்தார். தென் இலங்கையில் பலநிகழ்வுகள் சந்திப்புகளையும் மன்னார் ரயில் சேவையையும் ஆரம்பித்து வையத்துக்கொண்டு நேற்று முதல் தடவையாக யாழ்பாணம் வந்தடைந்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் முதல் தடவையாக வந்தடைந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ததாக அமைத்தது. யாழ்ப்பாணத்தை சேர்த்தவன் என்ற முறையில் எனக்கு இன்னும் சுவாரசியமாக கவனிக்க வைத்தது. 

மோடியின் வருகையை அடுத்து யாழ் வீதிகள் இரவோடு இரவாக சுத்தமாக கழுவப்பட்டன, யாழ் மாநாகர சபையின் தீயணைப்பு வண்டிகள் இந்த வேலையபார்த்தது. நான்கு இந்திய ஹெலிகாப்டர்கள் ஊடக யாழ்.மத்திய கல்லூரி விளையாட்டு திடலில் தரையிறங்கி அதன் அருகிலுள்ள யாழ் நூலகத்துக்கு 1.30 அளவில் காரில் சென்றடைந்தார். இந்திய பாதுகாப்பு படையினர் இந்தமுறை இலங்கை படையினரை நம்பாமல் தாங்களே அதிக அக்கறையுடன் பிரதமரை சுற்றிச் சுற்றி வந்தனர். நூலக வாயிலில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் வரவேற்க வைக்கப்பட்டிருந்த மாலைகள், சந்தனம் மற்றும் அணைத்து இதர பொருட்களும் இந்திய பாதுகாப்பு படையினரால் சல்லடையிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதிலும் மாலையில் உள்ள பூக்களின் இதழ்கள் ஒவ்வென்றாக நுணுக்கமாக பிரித்துப் பார்கப்பட்டது. சந்தனப்பொட்டு மோடியின் நெற்றியில் வைக்கப்பட முதலில் அனுமதிக்கப்படவில்லை. இரசாயன நச்சுப்பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கலாமே என்ற சந்தேகம் ஹொலிவூட் பாணியில் அவர்களுக்கு வலுத்தது. அதன் முக்கியத்துவம் வலியுருத்தப்பட கடைசியில் ஒருமனதாக இந்திய படையினர்களால் அனுமதிக்கப்பட்டது.

செய்தி சேகரிப்புக்காக வந்திருந்த பெரும் எண்ணிக்கையான ஊகடவியலாளார்கள், புகைப்பட நிருபர்கள் நூலகத்திற்கு செல்ல அனுமதிக்படவில்லை. நூலக பணியாளர்கள் மற்றும் சில அதிகாரிகள் மட்டுமே மோடியின் உரையினை செவிமடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். “இந்தியப் பிரதமராக நான் இருப்பதுடன் யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக வந்ததையடுத்து நான் மிகவும் மகிழ்கின்றேன், இலங்கைக்கு நான் வருகைதந்ததுக்கு காரணம் யாழ்ப்பாணம் வருகை தருவதற்கே, யாழ்ப்பாணம் தனித்துவமானதும் புதிய ஸ்பரிசங்களை தரக்கூடியது. இந்த நிகழ்வு எனக்கு புதிய திருப்தியையும் சகோதரத் தன்மையையும் தந்துள்ளது” என்று யாழ்.நூலக கலாசார நிலையத்துக்கு அடிக்கல் நாடும்போது தெரிவித்தார். உரையாற்றும்போது இருகையை கூப்பி தமிழில் வணக்கம் சொன்னது பார்வையாளர்களை ரொம்பவே கவர்ந்தது
.
யாழ்ப்பாணத்தின் இறுதி நிகழ்வாக இளவாலையில் அமைத்துள்ள இந்திய வீட்டு திட்டத்தில் மோடி கலந்துகொண்டார். வீதி கரையோரங்களில் வாழை மரங்கள், தோரணங்கள் மிக விமர்சையாக கட்டப்பட்டு சுவாரசியமான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய கொடிகளை தமிழர்கள் கையில் பிடித்து மோடிக்கு உச்சாகமாக அசைத்து இன்ப வரவேற்பு கொடுத்தனர். இறுதியாக இந்தியமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது மிக உருக்கமாக தனது உரையை ஆரம்பித்தார். இந்த நிகழ்வு எனக்கு கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வாக உள்ளது.. யாழ்ப்பாண மக்களுடைய வாழ்க்கை பாதுகாப்பானதாகவும் சுகம் நிறைந்தாகவும் அமைய வாழ்த்துக்கள் கூறுவதாக தெரிவித்தார். இந்திய நிதியில் முழுமையாக நாலாயிரம் வீடுகள் ஊவாவில் அமைக்கப்படவுள்ளன. இளவாலையில் 361 வீடுகள் அமைக்கப்படவுள்ளன, இதில் 12 வீடுகளுக்கு மட்டுமே மோடி உறுதிபத்திரத்தை வழங்கினார்.

கீரிமலையில் உள்ள வரலாற்று புகழ்மிக்க நகுலேஸ்வரன் ஆலயத்துக்கு சென்று மிகபயபக்தியுடன் வழிபாட்டில் ஈடுபட்டார் மோடி. வழமையாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயத்துக்கு மேலாடையுடன் யாரும் நுழைய முடியாது(ஆனானப்பட்ட மஹிந்தரே மேலாடை இன்றியே இதுக்களின் ஆலயங்கள் வருவார்). இந்து சமய கலாச்சாரங்களை கடுமையாக ஆரோக்கியமாக பின்பற்றும் யாழில் இந்திய பிரதமரும் அவர்களின் பாதுகாப்பு படையினரும் மேலாடைகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தை மோடியருகிலே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை முழுமையாக இந்திய இராணுவமே செயல்பட்டது. இலங்கை இராணுவத்தினர் மௌனமாக கையைகட்டிகொண்டு தள்ளி நிற்றனர் அல்லது நிற்க வைக்கப்பட்டனர். வெளிப்படையாக தெரியும் வகையில் எந்த பாதுகாப்பு ஆயுதங்களையும் அர்ஜுன் படங்களில் காட்டுவதுபோல் இந்திய பாதுகாப்பு பிரிவினர் வைத்திருக்கவில்லை.

மோடியின் உரைகள் அனைத்தும் இந்திமொழியிலே இடம்பெற்றது. அவை தமிழில் மொழிபெயர்கப்பட்டது. ஆங்கில மொழி தெரிந்திருந்தாலும் உரையாடல்களில் ஆங்கிலத்தை உபயோகிக்கவில்லை. இந்திய இறையான்மைகளை மோடி விட்டும் கொடுக்கவில்லை. மிக இயல்பாக மோடிகலந்து கொண்ட நிகழ்வுகள் யாழ்மக்களை இயல்பாக கவர்ந்தது.




Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP