இலவு - குறும்பட விமர்சனம்

>> Sunday 31 May 2015

வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்ல சம்பந்தம் என்ற விம்பத்தில் அவசரமாக திருமணம் செய்யப்பட்டு பிற்பாடு முரண்நகையான அனுபவங்களை எதிர்கொள்ளும் நிலையை விளக்கும் குறும்படமே “இலவு”. புலம்பெயர் ஆண்களுக்கு தாயகத்திலுள்ள பெண்களை திருமணம் செய்துகொடுக்க முன் தீவிர விசாரிப்புகள் தேவை என்பதினை வலியுருத்ததும் கருவை இயக்குனர் வரோதயன் இலவு குறும்படத்தில் முன்வைக்க முற்பட்டுள்ளார்.

மூலக்கதை தெளிவாக இருந்தாலும் சொல்ல எடுத்துக்கொண்ட வடிவம் செய்நேர்த்தியின்றி அபத்தமாக இருகின்றது. பாத்திரங்களுக்கு இடையிலான கட்டமைப்புகள் முழுமையில்லாமல் பரிதமாக பரிமாணிக்கின்றன. தந்தை மகளோடு அதீகபாசதில் இருக்கின்றார், வெறும் புரோக்கரின் வாய்மொழி பேச்சுக்கு ஒத்திசைந்து இயங்கி எந்த சிறிய விசாரிப்புக்களும் இன்றி பையனின் புகைப்படத்தை மகளுக்கு காண்பிகிறார். நமது பிரதேச சூழ்நிலையில் இவையெல்லாம் சாத்தியமா? புரோக்கரிடம் உரையாடும் காட்சிகள் அறிவியல் சித்தரிப்புகள் இன்றி சொல்லப்படும் மட்டமான காட்சிக்கோர்ப்புக்களாக இருகின்றன. மாப்பிள்ளையின் குடும்பப்பின்னணியோ, சாதீயம்தொடர்பாகவோ அல்லது வேலைதொடர்பாகவோ பெண்வீட்டாருக்கு நம்பகத்தன்மைமையைத் தரும் விடயங்கள் அடிப்படையாகவேயில்லை.

காட்டப்படும் காட்சியின் தொடர்ச்சியில் நம்பகத்தன்மை யதார்த்த சித்தரிப்புக்களின் மையத்தை விட்டுவிலகிக்கொண்டே இருகின்றன. சரியான விசாரிப்புகள் இன்றி வெளிநாட்டு ஆண்களுக்கு இங்கே உள்ள பெண்களை திருமணம்செய்துவைப்பதில் கவனம்தேவை என்ற விழிப்புணர்வை இயக்குனர் சொல்லவந்தால் அதில் அவரையறியாமலே அவர் தோற்றுள்ளார். மாப்பிள்ளையை விசாரிகின்றார்கள் அப்படியும்மீறி தவறுகள் நடைபெறுகின்றன என்பதினை இயக்குனர்சொல்ல முன்வந்திருந்தால் தர்கங்கங்களும் சொல்லவந்த பேசுபொருளும் உவப்பாக  இருந்திருக்கும். குறும்படத்தில் விசாரிப்பு என்ற பேசுபொருளேயில்லை. தந்தையின் அழைப்பில்லாமல் புரோக்கர் வருகின்றார், பையனைப்பற்றி சொல்கின்றார், மகளின் தகப்பனார் பாடசாலை சென்றுகொண்டிருந்த மகளையும் ஒரேநாளில் தடுத்து திருமணம் செய்துவைப்போம் என்ற முடிவுக்குவருகின்றார். பாசமாக வளர்த்த தகப்பனின் மன எண்ண ஓட்டங்களின் மாற்றம் தொடர்பாக எந்த காட்சி விளக்கமும் இல்லை. படம் ஆரம்பிக்கும்போதே பார்வையாளன் முடிவினையும் உய்த்தறிந்துகொள்கின்ற சூழல் இங்கேயுண்டு.

பெண் தனது ஆண் நண்பர்களை சந்திக்கும்போது இயல்பாகவே தனது கணவன்தொடர்பான கசப்பான விடயங்களை அறிந்துகொள்கின்றாள். இயல்பான விசாரிப்பிலே இந்த உண்மைகள் வெளிவரும்போது மிகவும் பாசமாகவளர்த்த தந்தையின் விசாரிப்புகள் ஏன் அபத்தமாக இருந்தன என்றகேள்விக்கு விடையில்லை. திரைக்கதையினை அவிழ்க்கும் முடிச்சுகள் சுவாரசியம் இன்றி தொடர்ச்சியாக இருகின்றன.

வசனங்கள் உரையாடலை வெளிப்படுத்தும் முறையில் ஏன் இந்தனை செயற்கைதன்மை என்று புரியவில்லை. ஒரேமீடிறனில் ஏற்றவிறக்கமின்றி மென்மையாக இருகின்றன. படம்முழுவதும் நடிப்பின்தன்மை மந்தமாக இருகின்றன. பாவனைகளை உடல்மொழினூடாக வெளிப்படுத்தும் நுட்பம் இல்லை.

ஒளிப்பதிவுகளில் முக்கியமான வசன அமைப்புகளை வெளிக்கொணர க்ளோஸ்-அப் காட்சிகளின் தேவைப்பாடுகள் அதிகமுண்டு. இக்குறும்படத்தில் முக்கியம் முக்கியமின்மையை வேறுபடுத்தி பிரித்துக்காட்ட ஒளிப்பதிவுச்சட்டங்கள் உதவவில்லை. வெறும் படம்பிடித்துகாட்டும் ஊடகமாக ஒளிப்பதிவு அமைந்திருக்கின்றது.

மெலிதாக ஒலிக்கும் சோகப்பாடல் உட்பட பின்னணியிசை காட்சிகளுடன் பொருந்த முற்பட்டாலும் இசையின் செறிவுத்தன்மையில் தொழில்நுட்பநேர்தியில்லை. காட்சிக்கோர்ப்புக்கள் இன்னும் சென்மைபடுத்தப்பட்டு இருக்கலாம். உள்ளடக்கம் ,வடிவம் இரண்டிலும் செய்நேர்த்தியில்லை. செறிவான உள்ளடக்கத்தை உருவாக்கி தகப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான மண எண்ணவோட்டத்தை யதார்த்தம்மீறாமல் உருவாகியிருந்தால் இக்குறும்படம் கொண்டாடக்கூடிய வடிவத்தில் இருந்திருக்கும். இயகுனர் இன்னும் பயிற்சியையும் நுண்ணிய அவதானிப்புகளும் அதிகரித்தால் அடுத்த கட்டத்துக்குச் செல்லமுடியும்.

வலம்புரி பத்திரிகைக்காக

 

Read more...

கோமகனின் தனிக்கதை - மதிப்பீடு

>> Wednesday 27 May 2015


கோமகனின் தனிக்கதை சிறுகதைத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்குகின்றன. ஈழத்து வட்டார வழக்குடன் வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கற்பனை நுட்பத்துடன் கோமகனின் தனிக்கதைகள் இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் எழுத்தென்பது வாழ்வின் சிக்கலானபோக்கை, அதன் தடுமாற்றங்களை இயல்பான போக்குடன் வாசகனுக்கு கொண்டு செல்வதினை  அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். வாசகனின் வழமையான எதிர்பார்ப்புக்களை தகர்த்து நுட்பமாக பயணிக்கவேண்டும். நல்ல கதையென்பது படித்துமுடித்த பிற்பாடு வாசகனை அக்கதை சிறிதுநேரம் யோசிக்கவைக்கும். அதன் பாதிப்புக்கள் வாசகனைவிட்டு நீங்காமல் சிலநேரம் தொந்தரவு கொடுக்கவேண்டும். கோமகனின் இத் தொகுப்பில் சிலசிறுகதைகள் அதற்கான தன்மையை கொண்டிருகின்றன.

வழமையாக ஈழஎழுத்தாளர்கள் எழுதும் கதையின் களங்கள் ஒரேமாதிரியான தன்மையில் இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகைக்காலம், புலம்பெயர்வுக்காலம், புலம்பெயர்வின்பின் அவர்களின் வருகைக்காலம் என்ற சட்டத்தில் பொருத்தக்கூடிய வகையிலிருக்கும். கோமகனின் கதைகளும் ஏறக்குறைய அவ்வாறான ஒத்தியல்பு தன்மைகளுடன் பொருந்துகின்றன. சுயபுனைவியல்(Auto fiction) தன்மையுடன் சிலகதைகளும்  தொகுப்பில் அமையப்பெற்றிருகின்றன.
 
இலக்கிய தரத்தில் தொகுப்பிலுள்ள அணைத்து சிறுகதைகளையும் இணைக்கமுடியாது அதே நேரத்தில் வெகுஜன வர்த்தக எழுத்து வடிவத்திலும் பொறுத்த முடியாது. இவற்றுக்கு மத்தியில் உள்ள தட்டையான வடிவத்தில் பெரும்பாலான கதைகள் இயங்குகின்றன. இலக்கியத்தன்மையான சிறுகதை வடிவத்தில் தோராயமாகக் பொருந்தக்கூடிய சிறுகதைகளாக சின்னாட்டி ,பாண் ,சொக்கப்பானை, றொனியன் போன்ற கதைகளை குறிப்பிடலாம்.

சின்னாட்டி சிறுகதை கொடுக்கும்தாக்கம் ஆழமானது. 1970இலுள்ள யாழ்பாணத்து சாதீயத்தின் திமிரினை முடிந்தளவில் அருகில் செல்ல முற்பட்டுள்ளது. சாதீயத்தில் கூடிய வெள்ளாளர்கள் சாதீயத்தில் குறைந்தவர்களை உக்கிரமாக வெறுத்துஉமிழ்திய கரிய வெம்மை படர்ந்த மிகக்கசப்பான வரலாறுகளை புனைவினூடாக முன்வைகின்றது. பறையடிக்கும் சின்னான் சாதீயத்தினால் உடையாரிடன் அவமானப்படுத்தப்படுவதும் உடையாரின் இறுதிநேரத்தில் அவருக்காக பறையடிகச்செல்வதும் நுட்பமாக பதியப்படுகின்றது. உடையாரின் இறப்புவீட்டில் சின்னாட்டி உக்கிரமாக பறையடிக்கின்றான். அவரின் பறையொலி ஆதீய சாதிவெறியின் உமிழ்த்திய பக்கங்களை அதிரச்செய்தபடி ஒலித்துக்கொண்டேயிருகின்றது. கடந்தகால சாதீய வெறுப்பை வெம்மையாக உக்ரமாக அதிரச்செய்துகொண்டே பறை ஒலித்துக்கொண்டு இருக்க தன்னிலைமறந்து பறையடித்த சின்னாட்டி மாரடைப்பால் இறகின்றார். இந்த மாரடைப்பால் இறகின்றார் என்ற புனைவு தேவையற்றதாக இருகின்றது. சின்னாட்டியின் பறையொலி ஒலித்துக்கொண்டேயிருக்க கதையினை முடித்திருந்தால் இலக்கியத்தன்மையை கதை முற்றாக அடைந்திருக்கும். உடையாரும் இறக்கின்றார் சின்னாட்டியும் இறகின்றார் ஆனால் சாதீயம் ஒழிந்ததா என்ற கேள்வியுடன் சிறுகதையை முடித்திருப்பது கதையின் தன்மையை சிறுமைவியல்ப் படுத்துகின்றது. இந்த ஆதிதப்புனைவின் தன்மை சிறுகதையின் இலக்கியத்தன்மைக்கு இடையூறுதருகின்றது. சிவப்புச் சட்டைக்காரர்களின் வர்க்கவிடுதலைப் பேசுக்கள் தொடர்பாக குறிப்பிட்டு  சாதீயம் சாதிகுறைந்தவர்களை சிறுமைப்படுத்தியபோது அதிலிருந்து வெளியேவர கம்யூனிஸம் உதவுவதும் சிறுகதையில் முக்கியமாகப் பதியப்பட்டுள்ளது.

பாண் சிறுகதை இத்தொகுப்பில் இன்னுமொரு முக்கியமான சிறுகதை. பேக்கரி தொழிலாளர்களின் வாழ்வியல் அபத்தங்களை இந்திய இராணுவக் காலத்தில் சொல்லத்தொடக்கி புலம்பெயர்ந்தபின் பாண் உற்பத்திசெய்வது மீண்டும் புலத்திலும் வாழ்வளித்தாலும் பாண் தொடர்பான மிரட்சியான கசப்பான கடந்தாகல வலிகள் அகலமறுக்கின்றது. தந்தைக்கும் தனக்கும் நடந்த இருன்மையான நிகழ்வுகள் நரேனுக்கு அடிமனதில் துன்புறுத்திக் கொண்டேயிருகின்றது. துன்புறுத்தலில் எரிச்சல்கொண்ட எழும்மனவெழுச்சியில் தன்மகளின் மீதுகூட வன்மம் காட்டுகின்றான். இந்த இடத்தில் சிறுகதை முழுமையை எட்டி வாசகனை யோசிக்கவைகின்றது. இச் சிறுகதையில் உதிரியாக 1987இலுள்ள யாழ்ப்பாணம் தொடர்பான பலதகவல்களையும் கோமகன் செலுத்தியுள்ளார். 

றொனியன் சிறுகதை மேன்போக்காக படிக்கக்கூடிய சிறுகதையல்ல நுட்பமாக அவதானிக்க வேண்டிய எக்கச்சக்க நுணுக்கங்கள் கதையின் போக்கில் பின்னப்பட்டுள்ளது. அம்மாவின் சுத்தசைவச் சாப்பாட்டுடன் வளர்ந்த நாய் மரணப்படுக்கையில் கிடக்கின்றது. அம்மாக்கு ரொம்பவே பிடித்த செல்லநாய். அம்மா அவரோடு உரையாடும்போது றொனியன் தொடர்பாக எப்போதும் கூறுவார். புலத்திலிருந்து அம்மா இறந்தபின் தாயகம் வருகின்றபோது அம்மாவின் வளர்ப்புநாயான றொனியனை தேடுகின்றார். அம்மா இறந்தபின் றொனியன் சாப்பிடாமல் இளைத்துநொந்து பரிதாபமாக வினோத ஜந்துவாகவிருகின்றது. றொனியன் அவரைப் பார்க்கும்போது அம்மா பார்போதுபோல் உணர்கின்றார். நாயின் பார்வையில் நுட்பமாக அம்மாவின் ஸ்பரிசத்தை உணர்கின்றார்.  அதன்பின் அவரின் மன அலைக்களிப்புக்கள் தொடர்கின்றன. இயல்பான எழுத்துநடையோடு இன்சிறுகதை மகத்துவமாகப் பதியப்பட்டுள்ளது.

சாதிகூடியவர்களின் சாதிவெறியின் அபத்தங்களை பெரும்பாலும் தன் சிறுகதையோடு முன்வைகின்றார் கோமகன். சில எள்ளல்களோடு சிலகதைகளின்போக்கு அமைதிருகின்றது. உதரணமாக தனிக்கதை என்ற சிறுகதையினை முன்வைக்கலாம். இக்கதையின் ஆரம்பத்தில் கொடுக்கப்படும் குறிப்புகளில் சாதீயத்தின் பெயரினையும் பொழுதுபோக்கு என்ற குறிப்பில் தவறனையும் வெண்டிறோசனும் என்ற குறிப்பிடுகின்றார். இந்தகவல் கதைக்கு தேவையாக இருந்தாலும் அத்தகவலுக்குப்பின் உள்ள நுண்ணரசியலில் எள்ளல்கள் சுடர்விடுகின்றன. இந்த நுண்ணரசியல் எழுத்தாளருக்கு தெரியாமல் அவரின் எழுத்துகளுடன் இயல்பாக அமைந்திருகாலம். ஆனால் கதையின் முடிவினையும் இடைநடுவே வரும் சம்பவாங்களையும் நுட்பமாக பார்க்கும்போது எள்ளல்தொனி தெளிவாகப் புரிகின்றது.

கோமகன் எடுத்துக்கொண்ட நடை மிகவும் இயல்பானநடை. ஆரம்பகட்ட இலக்கியவாசிப்பாளர்கள் தடைகளின்றி அவரின் கதையினுள் நுழையமுடியும். ஆனால் மிகப்பழைமையான உவமைகளையும் வர்ணிப்புக்களையும் கையால்கின்றார். தீவிர இலக்கிய வாசிப்பில் உள்ளவர்களுக்கு நிச்சயம் உவகையளிக்காது, நவீனப்படுத்தப்படவேண்டும். ஈழத்து எழுத்துகளை ஈழம்சாரதா வாசகன் படிக்கும்போது அவனுக்கு ஈழம்தொடர்பான மண்ணும்,அதன் பண்பாடுகளும் வாசிப்பு அனுபவத்தில்கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தென்னிந்திய வாசகர்வட்டத்டதில் சொல்லப்படுவதொன்று. இதனடிப்படையில் கோமகனின் கதையும் முற்றுமுழுவதுமாக சேர்க்கமுடியாது. பல சிறுகதைகளில் மண்ணின் பண்பாடுகள் தொடர்பாக ஆழமாகச்சொல்லியிருகின்றார் அல்லது அவரின் எழுத்து நடையில் இயல்பாக அமர்ந்திருகின்றது.

கற்பனைபுனைவியல் தன்மையில் இன்னும் இவரின் புனைவுத்தன்மை பூரணமாக இல்லை. ஆரம்பத்தில் திறமையாக சொல்லவந்த சில கதைகளைகூட மந்தகமாக முடித்துள்ளார். பதினாறு சிறுகதைகள் இருந்தாலும் கொண்டாடக்கூடிய சிறுகதைகள் சொற்ப்பம். கோமகனின் ஆரம்பகால எழுத்துகள் உற்பட சமீபத்திய எழுத்துகளும் சிறுகதையில் உண்டு. நுட்பமாக பார்க்கும்போது எழுத்துநடை, சிறுகதையினை அனுபவங்களோடு புனையும் தன்மை வாளர்ச்சிகண்டுள்ளது. வாழ்வின் அபத்தங்களின் நுண்ணியல் விளிம்புகளை நுட்பமாக எனிவரும் தொகுப்பில் பதிக்கக்கூடிய தன்மை அவரிடம் உண்டு.

வெளியீடு
மகிழ்
விலை 200 ரூபாய்( ஸ்ரீலங்கா விலையில்)


Read more...

துலைக்கோ போறியள் – குறும்பட விமர்சனம்

>> Sunday 17 May 2015


நூதனமான திரைமொழி கட்டமைப்பின் மூலமும் ஈழத்து வட்டார மொழிவழக்கை கச்சிதமாக உள்வேண்டி திரையில் பிரயோகிப்பதன் மூலமும் சில குறும்படங்கள் யதார்த்தபோக்கின் மிக அருகில் நின்று சுவாரசியக்க வைக்கின்றன. இந்தத் திறன்களை தோராயமாக ஒத்து ஈழத்தில் வெளிவந்த குறும்படம் துலைக்கோ போறியள்?”

ஈழத்து வட்டார மொழியில் துலைக்கோ போறியள் என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு தனித்துவமான கருத்தாக்கம் உண்டு. யாரவது வெளியே செல்லும்போது எங்கே போறீங்கள் என்று கேட்பது அபசகுனமாகக் கருதப்படிகின்றபடியால் அதற்குப் பதிலாக துலைக்கா போறியல் என்ற கேள்வியை மையமாகப் பயன்படுத்துவார்கள். ஒரு திருடனின் நூதனமான திருட்டுச் சம்பவத்துடன் ஈழத்தின் சில முக்கிய பிரச்னைகளை  தொட்டுச்செல்வதோடு சிறு புன்னகையுடன் ரசிக்கவும் வைகின்றது. திருடன் ஒருவன் பனைமரத்தில் கள்ளுச்சீவ ஏறியவரின் சைக்கிளை கவர்ந்துகொண்டு வலம்வரும்போது புலம்பெயர்தமிழர் ஒருவர் புலத்திலுள்ள நண்பனின் தாயகத்திலுள்ள பெற்றோர்க்கு பொதிஒன்றை கொடுக்கச் செல்கின்றார். அவருடன் இயல்பாக அறிமுகமாகி நைச்சியாம உரையாடிக்கொண்டு செல்லும்போது பல முக்கியபிரச்சனைகளை அவர்களுக்கு இடையேயான சொல்லாடல்களுடன் சொல்லப்படுகின்றது. புலம்பெயர்தமிழர்களின் நிதியுதவியினால் தாயகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் நீர்ந்துபோகவைக்கப்பட்டாலும் பெரும்பாலான நிதிகள் ஆடம்பர கவர்ச்சிக்கும் செயற்கையான கட்டமைப்புகளுக்கும் சென்றுவிடுவதிணை புலத்தில் இருந்து ஊர் வந்த நபரும், சைக்கிள் திருத்துபவரும் சந்திக்கும் ஒரே காட்சியில் திரைமொழியூடாக வெளிப்படுத்தியவிதம் ஆழமானது.

குறும்படத்தை இயக்கியிருப்பதோடு திருடனுக்காண பாத்திரத்தையும் மதி.சுதா ஏற்றி நடித்திருகின்றார். ஏரம்போ ஐயாவின் சாதிபார்பதினை படிமமாக்கியவிதம் யதார்த்தப்போக்குடன் ஒத்துப் பரிமாணிக்கின்றது. வீட்டு வளவுக்குள் உள்நுழையும்போது வெறுப்புஉமிழும் முகத்துடன் மதி.சுதாவை ஏறிடுவது என்று ஏரம்போ பாத்திரம் சாதிய ஆழ்மனவெறுப்பை உதிர்கின்றது. மதி.சுதாவுக்கு பூக்கண்டுக்கு தண்ணீர்வார்க்க வைத்திருந்த குவளையில் குடிக்க தண்ணீர்கொடுப்பது பின்னர் தொலைபேசி வாங்க வரும்போது கதிரையை துடைக்க சொல்வதும், துடைக்கும்போது கதிரைய துப்ப முயன்ற மதி.சுதாவை கண்டு கிளர்ந்தெழுந்த உணர்ச்சியில் உதைந்து விழுத்திட்டு சுதாகரித்து மதிசுதாவை சாந்தப்படுத்த சோடா கொண்டுவருகின்றேன் என்று சொல்லும் இடங்கள் நுட்பமான படிமமாக்கள்.

சாதிய ஒடுக்குமுறையையும் திருடனின் திருட்டையும் இணைக்க முற்பட்ட இடத்தில் இயக்குனரின் கவனங்களையும்மீறி சில நுண்னரசியல் பின்புலத்தளத்தில் உருவாக்கிவிட்டது. ஏரம்போ ஐயா சாதிபார்ப்பதினால் தாழ்சாதியவர் பாதிக்கப்படுவதுபோல் சித்தரிக்க முற்படும்போது தாழ்சாதியவர் திருடனாக காட்டப்படும்போது சில அபத்தங்கள் உருவாகிவிடுகின்றன. சமூகத்தில் தாழ்சாதியவர்கள்தான் திருடர்கள் அல்லது அதற்கான திருட்டுகுணத்தை கொண்டுள்ளார்கள் என்ற அபத்தமான கருத்துநிகழ்கின்றது. அந்தக் கருத்தை இக்குறும்பட கட்டமைப்புக்கள் ஆமோதிக்கும்வகையில் அமைத்திருக்கின்றது. இந்த நுன்னிய முரண்பாடுச் சித்திரத்தை இயக்குனர் மதி.சுதா யோசிக்கத்தவறிவிட்டாரா என்று யோசிக்கவைகின்றது. இந்த நுன்னியல் தர்க்கக் கட்டமைப்புக்களை மேன்மையாக கையாள்வதன் மூலமே சிறந்த இயக்குனராக நிறுவ முடியும்.

நடிப்பு ரீதியில் மதி.சுதா, ஏரம்போ ஐய்யா பாத்திரத்தில் நடித்த இருவரும் இயல்பாக நடித்திருகின்றார்கள். புலம்பெயர் நபராக நடித்தவரின் உடல்மொழிகளும் வசன வெளிபாடுகளும் செயற்கையாக உள்ளன இன்னும் மேன்படுத்தமுடியும். பின்னியிசையில் ஒலிக்கும் துளைக்கா போறியளா என்ற தீம்இசை பரவசப்படுத்தும் விதத்திலிருந்தாலும் நகைச்சுவை துணுக்குகளில் ஒலிக்கும் இசை வீடியோகேமில் ஒலிக்கும் இசையை நினைவுபடுத்துகின்றது. ஒளிப்பதிவு சிலஇடங்களில் பின்னனி களங்களை உள்வேண்டுவதில் முனைப்புக்காட்டி பாத்திரங்களை கச்சிதமாக உள்வேண்ட தவறிவிட்டாலும் உறுத்தவில்லை. பத்து நிமிட குறும்படத்தில் தான் சொல்லவந்த கருத்தை நூதனமாக காட்சிமொழிகளுடனும் ஈழத்து வட்டாரவழக்கு மொழியுடனும் பதிவுசெய்திருக்கிறார் மதி.சுதா.


நன்றி வலம்புரி.


Read more...

Wild Tales - அர்ஜென்டீன திரைப்படம்

>> Thursday 14 May 2015



Wild Tales ப்ளாக்கொமடி வகையைச்சார்ந்த அர்ஜென்டீன ஸ்பானிஷ் திரைப்படம். Damián Szifron என்பவரால் எழுதி இயக்கப்பட்ட இத்திரைப்படம் சிறந்த அந்நியமொழிக்காண ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பிடித்தது.

ஆறுகுறுங்கதைகளின் சேர்க்கையே படத்தின் மொத்தக்கதை. ஆறு கதைகளும் ஒவ்வொன்றும் முடிவடைய அடுத்த கதை தினித்துவமாக புதிதாக ஆரம்பிக்கும். தனிக்கதைகளுக்கிடையே எந்தவிதத் தனித் தொடர்பும் இல்லை. ஆனால் எடுத்தாளப்பட்டுள்ள கதையின் மையக்கரு மையம்கொள்கின்றது. அதியுச்ச மனித உணர்ச்சிபிளம்பு குமித்துசிதறும்போது வெளிப்படும் அக,புற செயல்பாடே படத்தின் மையக்கரு. தனித்தனி ஆறு குறும்படங்களாகக் கொள்ளலாம்.

முதாலவது கதை - Pasternak

பயணிகள் விமானம் ஓடுதளத்தைவிட்டு ஆகாயத்தில் சுதந்திரமாக பறக்கின்றது. விமானத்தினுள்ளே இளம்மொடல் பெண்ணும் நடுத்தரவயதுமிக்க ஆணும் தங்களுக்குள் சிநேகமாக அறிமுகமாகின்றனர். அந்தப்பெண்ணின் காதலன் Pasternak இணை விமானத்தில் அறிமுகமாகிய ஆணுக்கு தெரிந்து இருகின்றது. இருவரும் Pasternakஇணை பற்றி உரையாட  இவர்கள் அருகில் அமர்ந்திருந்த வயோதிபப் பெண்ணொருத்தி இவர்கள் உரையாடல் நடுவில் எழுந்து தனக்கும் Pasternakஇணைத் தெரியும் அவன் தன்மாணவன் என்று சொல்கிறார். வாவ் என்னவோர் ஆச்சரியம் என்று இருவரும் தங்களுக்குள் வியந்து நோக்க அவர்கள் அருகிலுள்ள இன்னுமோர் ஆண் எழுந்து எனக்கும் தெரியும் அவன் வகுப்புத்தோழன்தான் என்று சொல்லி வயோதிபப் பெண்ணிடம் தன்னை நினைவு இருக்கா எனக்கு நீங்க படிபிச்சிங்க என்று சொல்கிறான். மொடல்பெண்ணுக்கு பேயரைந்தபோல் முகம் மாறுகின்றது எதோ தப்பாக இருகின்றது என்பது புரிய ஆரம்பிகின்றது. மீயூசிக்கும் திடுதிடுப்பாக விபரீதமாக மாறுகின்றது. வேற யாருக்கேல்லாம் Pasternak இணை  தெரியும் என்று வினவ அனைவர்க்கும் தெரித்து இருகின்றது. விமானப்  பணிப்பெண்ணும் அதிர்ச்சியான முகத்துடன் வருகின்றாள், அப்புறம் என்னாச்சு என்பது மிச்சக்கதை. அட்டகாசமாக சுவாரசியக்க வைகின்றது.

இரண்டாவது கதை - The Rats

நெடுஞ்சாலை ஓரத்தில் சிறிய ரெஸ்ட்டொரண்ட். அங்கே வேலைபார்க்கும் பெண் வந்திருக்கும் நபர் தன்குடும்பத்தைச் சிதைத்த நபர் என்பதை இனம்கண்டு கொள்கின்றாள். ரெஸ்ட்டொரண்டில் அவரை தவிர்த்துவேறு கஸ்டமர்களே இல்லை மெலிதான இரவுப்பொழுது. அவரைகண்டு திகைத்த பெண் தலைமைசமையல்காரியிடம் அவரை பற்றிச்சொல்கிறாள். அவர்க்கு வழங்கும் உணவில் எலிவிஷத்தை கலந்துகொடுக்கச் சொல்கின்றாள். அவள் மறுத்தபோதும் அவளுக்கு தெரியாமல் அவரின் உணவில் விஷத்தைகலந்துவிடுகின்றாள். அவரும் சாப்பிடத் தொடங்க அவரின் மகனும் ரெஸ்ட்டொரண்ட்க்கு வந்து இணைந்துகொள்கின்றார். அவனும் தந்தையின் உணவினை பகிர்ந்து உனைச்செல்ல இவள் திகைகின்றாள். அப்புறம் என்ன ஆச்சு என்பதினை பார்த்து தெரிந்துகொள்க. சமையல்காரியக நடித்த பெண்மணியின் தேர்வு, உடல்மொழிகள் கச்சிதமாக இருகின்றன. அவரின் மிரட்டும் முகபாவனையை படத்தில் கவனித்துப் பாருங்கள்.

மூன்றாவது கதை - The Strongest

நீண்ட ஹைவேயில் பயணமாகிக்கொண்டு இருக்கும்போது ஒரு பழையலொங்குலொட்டான் கார் எதிர்ப்படுகின்றது. ஓவர்டேக் செய்யவும் அந்தக்கார் விடுவதாக இல்லை. கடுப்பாகி ஒருமாதிரி அந்தக் காரை முந்தி முடித்தபின் தனது நடுவிரலை உயர்த்திக்காட்டிவிட்டு சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வருகின்றார்  Diego. அட்டமத்துச் சனி அவர் நடுவிரலில் உக்கார்ந்திருக்கவேண்டும். கார் கொஞ்சம்தள்ளி பஞ்சராகிவிடுகின்றது. என்ன ஏலவுடா என்று கார்டயரை மாற்றமுயலும்போது அவர் உதாசினப்படுத்திவிட்ட கார்வருகின்றது. பயத்தில் தன் காரின் உள்ளேயேறி சமர்த்தாக அமர்ந்து விடுகின்றார். வந்தவன் சும்மா விடுவான தன்னுச்சபச்ச வன்முறையை எல்லாம் கார்கண்ணாடிக்கு காட்டிவிட்டு உக்கிரமாக Diegoவினை அவமானப்படுத்திவிட்டு நகர்கின்றார். ரொம்பக்கடுபாகிய Diego அவனைதாக்க முயல்கின்றார். அங்கதான் சிக்கல் ஆரம்பிகின்றது. பரபரப்பாக செல்லும் இக்கதை எந்தவிதத்திலும் அலுப்புத்தட்டாது. உச்சகட்டமான உவையடையவைக்கும் என்பதில் மாற்றுக்கருது இல்லை.

நான்காவது கதை - Little Bomb

டைனமைட் வைத்து கட்டிடங்களை தகர்ப்பதில் பிரபல்யமானவர் Fischer. அவரின் மகளின் பிறந்தநாளுக்கு கேக்வேண்டச்செல்ல அவரின் காரை தரப்பிடதுக்காண பணம் அரசாங்கத்துக்கு கட்டவில்லையேன்று தூக்சிச்செல்கின்றார்கள். மனிஷனுக்கு டென்ஷனுக்குமேல் டென்ஷன் கொடுகின்றார்கள். திரும்பத்திரும்ப பிரஷர்கொடுக்க ஒருகட்டத்தில் மனிஷன் பின்னியெடுத்துவிடுகின்றார்.

ஐந்தாவது கதை - The Proposal

உயர் பணக்கார மேட்டுக்குடி குடும்பதில் பிறந்த Mauricioனின் மகன் கர்பணி பெண் ஒருத்தியை கார்விபத்தில் கொன்றுவிடுகின்றான். அழுதுகொண்டு பெற்றோறிடம் சொல்ல அவர்கள் இதிலிருந்து தப்பிக்க குடும்ப வக்கீலை அழைக்கின்றார். அவரும் ஐடியா கொடுக்கின்றார். அவரின் தோட்ட வேலைகாரனுக்கு பணம்கொடுத்து அவர்செய்ததாகக் சமாளிக்க முயல்கின்றார். தோட்டகாரனும் சரி பணம்கிடைக்கின்றது என்று சம்மதிக்க, வந்த பொலிஸ்காரர்க்கு கிட்னியில்கூட ஜாஸ்தியாகக் கொஞ்சம் மூளை இருந்திருக்கவேண்டும் அவர் நிஜத்தை கண்டுபிடித்துவிடுகின்றார். அவரையும் வக்கீல் மூலம் பேசிப்பாக்கின்றார்கள் அவரும் லஞ்சத்துக்கு சம்மதிக்வைக்கின்றார். வக்கீலும் தனக்கு தனியாக பங்குதரவேண்டும் என்று கேட்கின்றார். கூடிக்கழித்துப்பார்த்தால் கொடுக்கவேண்டிய பணம் எக்கச்சக்கமாக வருகின்றது. அதனால் கடுப்படைந்த Mauricio ஒரேயொரு பில்லியன்தான் தருவேன் மொத்தமாகத் தேவையானவர்கள் பங்குபிரிசுக்கொள்ளுங்கள் என்கின்றார், உடன்படாவிட்டால் மகனை கைதுபண்ணச் சொல்கின்றார்.  பண ருசிகண்டவர்கள் திகைத்துப்போய்விடுகிறார்கள் சமரசம் செய்ய முற்படுகின்றார்கள். அப்புறம் என்ன ஆச்சு என்பதே மீதி சுவாரசியம். குற்ற உணர்வில் கலந்துகட்டி Mauricio பாத்திரத்தில் நடித்தவர் அட்டகாசமாக நடித்துள்ளார். விறுவிருப்புக்கு பஞ்சமில்லை.

ஆறாவது கதை- Until Death Do Us Part

புதிதாக திருமணபந்தத்தில் இணைந்த தம்பதியினர் ரிஷப்ஷனுக்கு வருகின்றார்கள். அட்டகாசமாக ஹோட்டலில் ரிஷப்ஷன் நடைபெறுகின்றது. அப்போது கணவனின் பழையகாதலி பற்றித் தெரிந்துகொள்கின்றாள் மனைவி. மனமுடைந்த மனைவி வந்திருந்த விருந்தினர்முன் நடனமாடிக்கொண்டிருக்கும்போது கணவனிடம் கேட்டு உறுதிசெய்துகொள்கின்றாள். மனமுடைந்து அழுது ஹோட்டல் மொட்டைமாடிக்குச் செல்கின்றாள் குலுங்கிக்குலுங்கி அழுகின்றாள். தற்செயலாக தம் அடிக்க நின்ற சமையல்காரர் ஆறுதல் சொல்கின்றார். அவரின் ஆறுதலினால் கவரப்பட்டடு அவருடன் முத்தமிட்டுகொள்கின்றாள். அந்தமுத்தம் கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி உடல் உறவை நோக்கிச்செல்கின்றது. அவளைத்தேடிவந்த கணவன் முக்கியவிடத்தில் பார்த்துவிட அதிர்கின்றார். அப்புறம் என்னாச்சு என்பது சிரிப்புக்கும் பஞ்சம் தராமல் நகர்கின்றது. நுணுக்கமான திரைப்பட படிமமாக்கள். அட்டகாசமான உருவாக்கம். கணவன் மனைவியாக நடித்தவர்கள் உட்பட ரிஷப்ஷனுக்கு வந்தவர்கள் அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.

மெலிதான நகச்சுவையை கலந்துகட்டியவிதம் ரொம்பவும் அட்டகாசம். சுவாரசியமாகப் ஒவ்வொரு காட்சிப்படிமமாகப் பார்த்துரசிக்கலாம்.


Read more...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP